search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முச்சந்தி காளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
    X

    விளக்கு பூஜை நடந்தது.

    முச்சந்தி காளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

    • அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபாட்டனர்.

    நாகப்பட்டினம்:

    வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற 108 குத்துவிளக்கு பூஜை நாகப்பட்டினம் வெளிபாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த முச்சந்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது ஆலயத்தின் ஆண்டு பங்குனி திருவிழா 25ம் தேதி துவங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடைபெற்றது தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×