search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருது விடும் திருவிழா"

    • எருது விடும் திருவிழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, அத்திகானூரில் 71-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை ஊர்கவுண்டர் சங்கர், ஊர் செட்டியார் ராஜேந்திரன் மற்றும் முனுசாமி செட்டியார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகளை இந்த விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர்.

    குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைக்கு முதல் பரிசாக ரூ.2.22 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1.77 லட்சமும், 3-ம் பரிசாக ஒரு லட்சமும் என 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    • அம்மன் கோயில் வளாகத்தில் காளைகளை வரிசையாக நிற்க வைத்தது, காளைகளுக்கு பூஜை செய்து புனித நீர் தெளிக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விடப்பட்டன .
    • சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு இதில் மாரண்டஅள்ளி பகுதியை சுற்றியுள்ள , வேங்கு தெரு, சொவத்தம்பட்டி, முகமதியர் தெரு, சந்தை வீதி, பைபாஸ் ரோடு, ஆணங்கிணற்று, என பல்வேறு பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகளை அழைத்து வரப்பட்டு திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் காளைகளை வரிசையாக நிற்க வைத்தது, ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், தர்ம கர்த்தா, ஆகியோர் முன்னிலையில் காளைகளுக்கு பூஜை செய்து புனித நீர் தெளிக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விடப்பட்டன .

    இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கண்டு களிக்க மாரண்டஅள்ளி சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எருதாட்ட விழாவை கண்டு களித்தனர்.

    இந்நிகழ்ச்சியை பலத்த பாதுகாப்புடன் மாரண்ட அள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காளை மாடுகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
    • வடக்கயிறால் கட்டி சாலைகளில் சீறி பாய வைத்து விளையாட்டு காட்டி அனைவரையும் மகிழ்வித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    மாட்டுப் பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து, படையலிட்டு கால்நடைகளை மக்கள் வணங்குவார்கள். அதே நாளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற தமிழர் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுகள் நடைபெறும்.

    மூன்றாவது நாள் எருது விடும் திருவிழா கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டில் மஞ்சு விரட்டிற்காக தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில் காளை மாடுகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    மணல் குவியல்களை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்பட்டு, பொங்கல் நாளன்று அவை மஞ்சு விரட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.

    இந்த வகையில் 12 கிராமங்களை உள்ளடக்கிய தாய் கிராமமான கடகத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற எருது விடும் விழாவிற்கு கடகத்தூர் ஊர் கவுண்டர் பச்சியப்பன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாலு, மாவட்ட கவுன்சிலர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பச்சமுத்து ஊர் முக்கிய பிரமுகர்கள் பழனி, காமராஜ், ஊர் கவுண்டர், ஊர் முதலியார், ஊர் செட்டியார், ஊர் நாயுடு, ஊர் நயினார், அனைத்து கோம்பு கவுண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊர் கவுண்டர்கள் ஒன்று கூடி கடகத்தூர் பொதுமண்டுவில் சாட்டைக்கு பூஜை செய்து அந்த சாட்டையை எடுத்துச் சென்று எருதுகளின் மேல் பாரம்பரிய வழக்கப்படி மூன்று தரம் தட்டி வணங்கிய பிறகு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு எருதுகளை வடக்கயிறால் கட்டி சாலைகளில் சீறி பாய வைத்து விளையாட்டு காட்டி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்த எருது விடும் விழாவில் தருமபுரி பி1 நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×