என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாரண்டஅள்ளியில் எருது விடும் திருவிழா
- அம்மன் கோயில் வளாகத்தில் காளைகளை வரிசையாக நிற்க வைத்தது, காளைகளுக்கு பூஜை செய்து புனித நீர் தெளிக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விடப்பட்டன .
- சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு இதில் மாரண்டஅள்ளி பகுதியை சுற்றியுள்ள , வேங்கு தெரு, சொவத்தம்பட்டி, முகமதியர் தெரு, சந்தை வீதி, பைபாஸ் ரோடு, ஆணங்கிணற்று, என பல்வேறு பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகளை அழைத்து வரப்பட்டு திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் காளைகளை வரிசையாக நிற்க வைத்தது, ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், தர்ம கர்த்தா, ஆகியோர் முன்னிலையில் காளைகளுக்கு பூஜை செய்து புனித நீர் தெளிக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விடப்பட்டன .
இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கண்டு களிக்க மாரண்டஅள்ளி சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எருதாட்ட விழாவை கண்டு களித்தனர்.
இந்நிகழ்ச்சியை பலத்த பாதுகாப்புடன் மாரண்ட அள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்