search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திகானூரில் எருது விடும் திருவிழா
    X

    அத்திகானூரில் எருது விடும் திருவிழா

    • எருது விடும் திருவிழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, அத்திகானூரில் 71-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை ஊர்கவுண்டர் சங்கர், ஊர் செட்டியார் ராஜேந்திரன் மற்றும் முனுசாமி செட்டியார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகளை இந்த விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர்.

    குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைக்கு முதல் பரிசாக ரூ.2.22 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1.77 லட்சமும், 3-ம் பரிசாக ஒரு லட்சமும் என 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    Next Story
    ×