என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.எஸ்.எம்."
- தொகுதிக்குள் வருவதில்லை என தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி உள்ளார்.
- பொதுமக்கள் பட்டா கேட்டும், பேருந்து வசதி கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்., ஆனந்தன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகே ஆலூத்துபாளையம் பகுதியில் கடந்த 9 ந்தேதி புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான நான் தொகுதிக்குள் வருவதில்லை என தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி உள்ளார். மேலும் பொதுமக்கள் பட்டா கேட்டும், பேருந்து வசதி கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே நான் சட்டமன்ற த்தில் பேசி உள்ளேன். பலமுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். பல்லடம் தொகுதியின் அடிப்படைத் தேவைகளான 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் சமர்ப்பித்தும் இன்னும் அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் பல்வேறு குறைகளை என்னிடம் தெரிவித்து உள்ளனர். எனவே அவர் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதை விடுத்து திருப்பூர் தெற்கு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து தருமாறு கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்