search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை"

    கோவையில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    நாமக்கல்லை சேர்ந்தவர் ஜானகி ராமன். இவரது மகன் அரிஹரன் (21). இவர் கோவை கோவில் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புக்கு சென்று வந்தார்.

    இன்று காலை மாணவர் அரிஹரன் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கோவில் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த மாணவர் அரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சினையா? காதல் விவகாரமா? கல்லூரியில் தொந்தரவா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு காசிவிஸ்வநாத நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் நாகர்கோவிலில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது20) இவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் டிப்ளமோ 2-வது ஆண்டு படித்து வந்தார்.

    இவர் வீட்டில் சரியாக படிக்காமல் எப்போதும் செல்போனில் பேசியபடி இருந்தார். நேற்றும் அதுபோல விஜயகுமார் செல்போனில் பேசியபடி இருந்தார். இதனை அவரது தாய் அருந்ததி கண்டித்தார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் அங்கு மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×