search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடையளவு"

    • எடையளவுகள் முத்திரையிடும் முகாம் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
    • முத்திரை முகாமிற்கு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டு வந்து மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சட்டமுறை எடை யளவுகள் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்ட முறை எடையளவுகள் (அமலாக்கம்) விதிகள் 2011-ன்படி வணிகர்கள் பயன்படுத்தும் மின்னனு தராசுகள், மேடைதராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒருமுறையும், மற்றும் பிற மேசை தராசுகள், விட்டதராசுகள், எடைகற்கள், நீட்டல் அளவைகள் போன்றவை 2 வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரையிட்டு பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு முத்திரையிடாமல் வணிகர்கள் எடை யளவுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும்.

    வணிகர்களுக்கு உதவும் வகையில் எடையளவுகளை மறுமுத்திரையிட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் மதுரை, தொழி லாளர் இணை ஆணையரின் உத்தரவுப்படி தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வணிகர்கள் பயனடையும் வகையில் வணிகர்கள் பயன்படுத்தும் எடையளவுக ளை காரைக்குடி கொண்டு வந்து முத்திரை யிடுவதால் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு வணிகர்களின் நலனுக்காக தேவகோட்டை பகுதியில் காரைக்குடி, முத்திரை ஆய்வாளரால் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலு வலகம், 5ஏ, மேலவயல் குளக்கால் தெரு, வெள்ளையன்ஊரணி தெற்கு, தேவகோட்டை என்ற முகவரியில் முகா மிட்டு முத்திரைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட முத்திரை முகாமிற்கு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டு வந்து மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு பயனடை யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எடையளவு சட்டத்தின் கீழ் இனிப்பு, ஜவுளிக்கடை வியாபாரிகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த, ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்

    (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சிவகங்கை மாவட்டடத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள், இனிப்பு கடைகளில் மற்றும் நிறுவனங்களில் திடீர் சோதனை செய்தனர்.

    எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ், பொட்டலப்பொருட்களின் மேல் பொருளின் பெயர், பொட்டலமிடுபவர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி, நிகர எடை/நிகர எண்ணம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (வரிகள் உட்பட), பொட்டலமிட்ட, தயாரித்த மாதம், வருடம், நுகர்வோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யவேண்டும்.

    அவ்வாறு சட்டவிதிகளின்படி இனிப்பு மற்றும் ஜவுளி பொட்டலங்களில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 7 வணிகர்கள் மீது பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும், எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 வணிகர்கள் மீதும், எடையளவு மறு முத்திரை இடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத, 10 வியாபாரிகள் மீதும் எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட 17 முரண்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் அவர்களது பெயர் விவரங்களை labour.tn.gov.in என்ற விடுதலின்றி கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த சோதனையில் சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம் மற்றும் சிவகங்கை, காைரக்குடி, திருப்பத்தூர்,

    தேவகோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், கலாவதி, வசந்தி ஆகியோர் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    ×