search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளிக்கடை"

    • வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடம் ரூ.10 நாணயம் புழக்கத்தில் இல்லாததால் அதனை காண்பது அரிதாகிவிட்டது.
    • சுமார் ஒரு கி.மீ. தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்று நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    திருப்பத்தூர்:

    வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ரூ.10 நாணயங்கள் செல்லாது என வதந்தி உள்ளது.

    இதனால் வியாபாரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரூ.10 நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் பொதுமக்களும் அதனை பயன்படுத்துவதில்லை.

    தற்போது வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடம் ரூ.10 நாணயம் புழக்கத்தில் இல்லாததால் அதனை காண்பது அரிதாகிவிட்டது.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை சாலையில் உள்ள ஒரு கடையில் கடந்த 3 நாட்களாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.10 நாணயங்கள் 5 வழங்கினால் புதிய டீசர்ட் வழங்கப்படும் என அறிவித்தனர்.

    இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீப்போல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாமல் தூக்கி ஒதுக்கி வைத்திருந்த நாணயங்களை அவசர, அவசரமாக சேகரித்து எடுத்துக்கொண்டு அந்த கடையில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்று நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    தினமும் 60 நபர்களுக்கு டோக்கன் வழங்கி பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நாளை வெள்ளிக்கிழமை வரை மட்டுமே, இந்த விற்பனை செய்யப்படும் என கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தின்மூலம் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வந்துள்ளது.

    அனைத்து இடங்களிலும் ரூ.10 நாணயம் புழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • தீயில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பிரபல ஜவுளி கடைக்கு சொந்தமான குடோன் தி.நகர் பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் இருந்து இன்று அதிகாலை புகை வந்தது. கடையின் காவலாளி புகை வருவதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசாரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தேனாம்பேட்டை நிலையத்தில் இருந்து 2 வாகனங்கள் வந்தன. தீயணைப்பு படை வீரர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதிகாலை நேரம் என்பதால் வாகன நெரிசல் எதுவும் இல்லை. தீயணைப்பு வாகனங்கள் விரைவாக வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    மேலும் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த தீ விபத்தில் குடோனில் கட்டு கட்டாக இருந்த துணிகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பெரிய அளவில் ஏற்படக் கூடிய தேசம் உடனடியாக தீயை அணைக்கப்பட்டதால் தவிர்க்கப்பட்டுள்ளது.

    தீயில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. தி.நகர் ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியது.
    • இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மாலை கடையின் முகப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள,மளவென பரவிய தால் முகப்பின் வட பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் கும்பகோணம், திருவிடை மருதூர் தீயணைப்பு துறையினர் 3-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின், தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியதால் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்க ப்பட்டது.

    மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை ஆற்றூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
    • வழக்குபதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள வட்டவிளை தேமாணூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 35), இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார்.இவரதுமனவைி சுபி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்த சுனில்குமார், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என நினைத்துள்ளார். இதற்காக பலரிடம் பணம் கேட்டு வந்தார் ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் சுனில்குமார் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரை சாப்பிட வருமாறு மனைவி சுபி அழைத்துள்ளார். அப்போது, எலி மருந்து (விஷம்) சாப்பிட்டேன் என்று கூறிய சுனில்குமார் மயங்கி விழுந்தார். உடனே சுபி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை ஆற்றூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சுனில்குமார், நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் அனும திக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுனில்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி சுபி, திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குபதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

    • பணியாளர்கள் கடையின் உள்ளே டிராயரில் இருந்த பணம் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தனியார் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது.

    நேற்று வியாபாரம் முடிந்து கடை பூட்டப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த பணியாளர்கள் கடையின் உள்ளே டிராயரில் இருந்த பணத்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து உடனடியாக கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் கடையின் மேல் மாடி வழியாக மர்ம நபர்கள் குதித்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இருப்பினும் பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன் முடிவில் எவ்வளவு பணம் கொள்ளை போனது, வேறு ஏதாவது பொருள் கொள்ளை போனதா? என்பது தெரியவரும்.

    மேலும் கடையில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசியை அடுத்து முத்துசெட்டிபாளையத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் சக்திகுமார்(வயது 30) .ஜவுளி கடையில வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (25). கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனம் உடைந்த சக்திகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அவினாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 35). இவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் தளவாய் புரத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கும் பழக்கம் இருந்தது. அப்போது எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக இளங்கோ கூறினார். இதற்காக ஜவுளிக்கடை நடத்தி வரும் ஞானசேகரன், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.அவர்கள் தனக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

    இதையடுத்து அவர்களது ஜவுளி கடைக்கு சென்று 3 தவணைகளில் ரூ. 16 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தேன். அதன் பின் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி வேலை வாங்கி தரவில்லை‌ பணத்தை யும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படை யில் ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.

    சிவா டெக்ஸ்டைல்ஸ்

    இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • மதுரை ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பட்டாசு விற்பனையும் களைகட்டியது.
    • 15 நாட்களில் ரூ.150 கோடி வசூலானது.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி மற்றும் பட்டாசுகள் விற்பனை களைகட்டி வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக புது துணிமணி, பட்டாசுகள் வாங்குவதற்காக மாநகருக்குள் குவிந்துள்ளனர்.

    ஜவுளி கடைகள் அதிகமாக இருக்கும் விளக்குத்தூண், கீழவாசல், மேல ஆவணி மூல வீதி, கோரிப்பாளையம், தெற்கு வாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுரை மாவட்டத்தில் போலீசார் அனுமதியுடன் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு புதிய புதிய ரகங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    அவற்றை வாங்கி செல்வதற்காக பொதுமக்கள் கூட்டம் முண்டியடித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பெரிதாக சோபிக்கவில்லை. மாவட்டம் முழுவதும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் நிம்மதியாக ஜவுளிக்கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்கி திரும்புகின்றனர். பட்டாசு கடைகளில் புதிய, புதிய ரக பட்டாசுகளை வாங்கி வந்து தெருக்களில் சந்தோஷமாக வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பெரிய- நடுத்தர- சிறிய ஜவுளி கடைகள் உள்ளன. இங்கு தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு 2 வாரங்களாக கூட்டம் அலைமோதியது.

    இது குறித்து மதுரை மாவட்ட ஜவுளி கடை விற்பனையாளர்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை என்பது கொேரானாவுக்கு முந்திய காலகட்டத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. அப்போது வருமானம் பெரிய அளவில் இருந்தது.

    இதனால் எண்ணற்ற தொழிலாளிகளை வேலைக்கு நியமித்து, அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கி வந்தோம். கொரோனாவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்களிடம் இப்போது பெரிய அளவில் பணப்பழக்கம் இல்லை.

    இருந்த போதிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜவுளி கடைகளுக்கு வருகின்றனர். அவர்கள் உயர்ந்த மதிப்பு உடைய ஆடைகளை எடுப்பதில்லை. குறைந்த விலைக்கு கிடைக்கும் உடைகளை மட்டுமே அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து புதிய ரக ஜவுளிகளை இறக்குமதி செய்து, கடந்த 15 நாட்களாக விற்பனை செய்து வருகிறோம். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலும் பெரிய ஜவுளி கடைகளில் ரூ.1 கோடி, நடுத்தர ஜவுளி கடைகளில் ரூ.40 லட்சம், சிறிய ஜவுளிக்கடைகளில் ரூ.3 லட்சம் என்ற அளவில் விற்பனை இருக்கும். கடந்த 15 நாட்களில் எங்கள் கடைகளில் 2,3 மடங்கு என்ற அளவில் விற்பனை நடந்து வருகிறது.

    இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் ஜவுளி கடையில் ஊழியர்கள் சம்பளம், மின்சார செலவு மற்றும் பிற செலவுகள் அதிகரித்து உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைத்து உள்ளது என்று தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டத்தில் 15 நாட்களில் மட்டும் ரூ.150 கோடி என்ற அளவில் ஜவுளிக்கடைகளில் விற்பனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. இது குறித்து பட்டாசு விற்பனை யாளர்கள் கூறுகையில், சிவகாசியில் இருந்து ஒட்டுமொத்தமாக பட்டாசுகளை கொள்முதல் செய்து சில்லரைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

    இப்போது புதிய புதிய ரகங்களில் பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சிவகாசி பட்டாசுகளின் விலை அதிகரித்து உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சிவகாசியில் இருந்து புதிய புதிய ரகங்களில் பட்டாசுகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

    அவற்றின் விலை சிறிது அதிகமாக உள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசிக்கிறார்களே தவிர, பெரிய அளவில் வாங்குவதற்கு ஆர்வம் செலுத்துவதில்லை. மதுரை மாவட்டத்தில் பட்டாசு கடைகளை போட அரசு மற்றும் போலீசார் அதிக அளவில் கெடுபிடி செய்தனர்.

    இதன் காரணமாக மாவட்ட அளவில் 300-க்கும் உள்ளிட்ட கடைகள் மட்டுமே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக 2-3 கோடி ரூபாய்கள் வரை விற்பனை நடந்து உள்ளது. இதில் முதலீடு கழித்து பார்த்தால், எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இதனை வைத்து கொண்டு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க முடியும்" என்றனர்.

    • எடையளவு சட்டத்தின் கீழ் இனிப்பு, ஜவுளிக்கடை வியாபாரிகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த, ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்

    (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சிவகங்கை மாவட்டடத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள், இனிப்பு கடைகளில் மற்றும் நிறுவனங்களில் திடீர் சோதனை செய்தனர்.

    எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ், பொட்டலப்பொருட்களின் மேல் பொருளின் பெயர், பொட்டலமிடுபவர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி, நிகர எடை/நிகர எண்ணம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (வரிகள் உட்பட), பொட்டலமிட்ட, தயாரித்த மாதம், வருடம், நுகர்வோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யவேண்டும்.

    அவ்வாறு சட்டவிதிகளின்படி இனிப்பு மற்றும் ஜவுளி பொட்டலங்களில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 7 வணிகர்கள் மீது பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும், எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 வணிகர்கள் மீதும், எடையளவு மறு முத்திரை இடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத, 10 வியாபாரிகள் மீதும் எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட 17 முரண்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் அவர்களது பெயர் விவரங்களை labour.tn.gov.in என்ற விடுதலின்றி கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த சோதனையில் சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம் மற்றும் சிவகங்கை, காைரக்குடி, திருப்பத்தூர்,

    தேவகோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், கலாவதி, வசந்தி ஆகியோர் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    • மதுரையில் ஜவுளிக்கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்ைப பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    • விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் நகரைச சேர்ந்தவர் காசிராஜா. இவரது மனைவி உமாதேவி (வயது 52). தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நேற்று கீழவாசல் பகுதிக்கு ஜவுளி வாங்க வந்தார். அப்போது உமாதேவி வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினார். அதில் ரூ. 2 ஆயிரம் இருந்தது.

    இது தொடர்பாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள், மீனாட்சி கோவில் சரக உதவி கமிஷனர் காமாட்சி மேற்பார்வையில், விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் உமாதேவியிடம் பணப்பையை பறித்தது பெண் என்றும், அவர் மேலூர் மில் கேட் சிங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி என்ற லதா (45) என தெரிய வந்தது. இதையடுத்து ேபாலீசார் அவரை கைது செய்தனர்.

    • ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பல்வேறு ஆஃபர்கள் வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது.
    • ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஒரு ஜவுளிக்கடை துவங்கி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை எனவும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பல்வேறு ஆஃபர்கள் வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை பார்த்த பொதுமக்கள் காலை முதலே கடை வாசலில் குவியத் தொடங்கினர்.

    கடை திறக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பணியாளர்கள் திணறினர். பெண்கள் தங்களுக்குப் பிடித்த புடவைகளை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றனர்.

    ×