search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடையளவுகள் முத்திரையிடும் முகாம்
    X

    எடையளவுகள் முத்திரையிடும் முகாம்

    • எடையளவுகள் முத்திரையிடும் முகாம் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
    • முத்திரை முகாமிற்கு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டு வந்து மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சட்டமுறை எடை யளவுகள் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்ட முறை எடையளவுகள் (அமலாக்கம்) விதிகள் 2011-ன்படி வணிகர்கள் பயன்படுத்தும் மின்னனு தராசுகள், மேடைதராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒருமுறையும், மற்றும் பிற மேசை தராசுகள், விட்டதராசுகள், எடைகற்கள், நீட்டல் அளவைகள் போன்றவை 2 வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரையிட்டு பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு முத்திரையிடாமல் வணிகர்கள் எடை யளவுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும்.

    வணிகர்களுக்கு உதவும் வகையில் எடையளவுகளை மறுமுத்திரையிட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் மதுரை, தொழி லாளர் இணை ஆணையரின் உத்தரவுப்படி தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வணிகர்கள் பயனடையும் வகையில் வணிகர்கள் பயன்படுத்தும் எடையளவுக ளை காரைக்குடி கொண்டு வந்து முத்திரை யிடுவதால் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு வணிகர்களின் நலனுக்காக தேவகோட்டை பகுதியில் காரைக்குடி, முத்திரை ஆய்வாளரால் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலு வலகம், 5ஏ, மேலவயல் குளக்கால் தெரு, வெள்ளையன்ஊரணி தெற்கு, தேவகோட்டை என்ற முகவரியில் முகா மிட்டு முத்திரைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட முத்திரை முகாமிற்கு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டு வந்து மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு பயனடை யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×