search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக இருதய தினம்"

    • பேரணியானது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் புறப்பட்டு சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறைவடைந்தது.
    • ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    தென்காசி:

    தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மாணவ, மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்ட இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சாந்தி பன்னோக்கு மருத்துமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் தமிழரசன், மருத்துவர் பிரிதிவிராஜ் கலந்து கொ ண்டனர். மருத்துவர் அன்பரசன், மருத்துவர் கவுதமி தமிழரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பேரணியானது தென்காசி புதிய பஸ் நிலை யத்தில் புறப்பட்டு, மேம்பா லம், கூலக்கடை பஜார், பெரிய கோவில், தென்காசி நகராட்சி, சந்தை பஜார், அரசு பஸ் டிப்போ வழியாக சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறை வடைந்தது. பேரணி ஆரம்பம் முதல் முடியும் வரை பெய்துவந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஊர்வலமாக நடந்து வந்த மருத்துவர்கள், மாணவ, மாணவிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

    ஊர்வலத்தில் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும் மாணவர்கள் சென்றனர். தென்காசியில் முதன் முறையாக கரோனரி ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி, பேஸ்மேக்கர், பெரி பெரல் ஆஞ்சியோ கிராபி, பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகள் மிகச் சிறந்த இதய நோய் மருத்துவர்களால் சாந்தி பன்னோக்கு மருத்துவ மனையில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

    திருப்பூர்:

    ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

    இதனிடையே இதய நோய்களில் இருந்து தப்பிப்பது மற்றும் இதயத்தை நலமுடன் பாதுகாப்பது ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பார்க் சாலை வழியாக சென்று மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது. இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 1 -வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்று தேவகி சிறப்பு மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
    • மேலும் தகவல்களுக்கு 96006 00888 ஆகிய எண்களை அழைக்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    எந்திரத்தனமான இந்த உலகில் இளம் வயதினர் திடீர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது மாரடைப்பு. மாரடைப்பு ஏற்பட்டு சரியான நேரத்தில் மருத்தவ உதவியை நாடாதது உயிரிழப்புக்கு முக்கிய காரணம். பெரும்பா லானோருக்கு மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறி குறிகள் தெரிந்திருக்கும். ஆனால் அதை அவர்கள் உதாசீனபடுத்தி இருப்பார்கள்.

    நெஞ்சுவலி, மூச்சு திணறல், அதிக வேர்வை போன் றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். மாரடைப்பு என்பது இதயத்திற்கு செல் லும் ரத்த குழாயில் முற்றி லும் அடைப்பு ஏற்படுவதி னால் வருகிறது. நெஞ்சு வலி வந்தால் முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோ சனைப்படி உடனடியாக இ.சி.ஜி. எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இ.சி.ஜி.ல் மாரடைப்பு இருப்பதை உறுதிப்படுத்தி விட்டால் முதலுதவி எடுத்துக் கொண்டு கேத் லேப் வசதி உள்ள மருத்துவமனைக்கு சென்று உடனடியாக அஞ்சி யோகிராம் செய்து அடைத்த ரத்த குழாய்யை பலூன் அல்லது ஸ்டென்ட் மூலம் அடைத்த ரத்த குழாய்யை சரிசெய்வது சரியான மருத்துவமாகும். சில சமயங்களில் இ.சி.ஜி. சரியாக இருந்தும் கூட மாரடைப்பு வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு என்பது நெஞ்சு வலி இல்லாமல் வயிறு வலியாகவோ அல்லது அதிக வேர்வையாகவோ வெளிப்படலாம்.

    இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களுக்கு வாய்வு உள்ளதாக என நம்பி மாரடைப்பின் அறிகுறியை தவறுதலாக எண்ணக்கூடும். மாரடைப்பு வந்தால் இதயம் பலவீனம் அடையும். அதனை ஒரு குறிப்பிட்ட சமையத் திற்குள் சரிசெய்யவிட்டால் அது நிரந்தர தொந்தரவாக மாறிவிடும். அதனால் மார டைப்பு வந்தால் நேரத்தை வீணடிக்காமல் உயிர் காக்கும் உன்னத நேரத்திற்குள் மருத்து வரை நாடி இதயம் செயலி ழப்பதை தவிர்க்கலாம்.

    பெரும்பாலானோருக்கு மாரடைப்புக்கான சிகிச்சை களான ஆஞ்சியோ பிளாஸ்ட்டி அல்லது பை பாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தாங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது என்கிற எண்ணம் உண்டு அது தவறானது. மார டைப்பு வந்தவர்கள் அதற் கான சிகிச்சைக்கு பிறகு இரண்டு வார காலம் ஒய்வு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அவர்கள் நடைப்ப யிற்சி, உடற்பயிற்சி மற்றும் தங்களது அன்றாட வேலை களை துவங்கலாம்.

    ஒரு மாதத்திற்கு பிறகு அவர்கள் அனைத்து வேலைகளையும் செய்யலாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் மூன்று மாதத்திற்கு பிறகு அவர்களால் எல்லா வேலைகளையும் செய்ய முடியும். மாரடைப்பு ஒருமுறை வந்தவருக்கு மீண்டும் மார டைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    மாரடைப்பு வந்தவர்கள் மீண்டும் மாரடைப்பு வராமல் இருக்க தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அவர்கள் தங்களது சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவை மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். புகைப்ப ழக்கம், புகையிலை, மது அருந்துதல் இவற்றில் ஏதேனும் இருந்தால் உடனைடியாக நிறுத்த வேண்டும். மன அழுத்தம் மாரடைப்பு வருவ தற்கான முக்கியமான காரண மாகும். ஆதலால் வேலைப் பளு, குடும்ப சுமை இவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கவும்.

    எங்கள் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது. பிரைமரி ஆஞ்சியோபி ளாஸ்ட்டி, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து பரிசோதனைக ளையும், சிகிச்சையும் அளிக்க ஆஞ்சியோகிராம் பரிசோதனை, ரத்தநாள அடைப்பிற்கு 'ஸ்டென்ட்' சிகிச்சை, இருதய வால்வு சுருக்கத்திற்கு பலூன் சிகிச்சை, பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை, இருதய துவாரங்களை கருவி கொண்டு மூடும் சிகிச்சை, ஓ.சி.டி., ஐ.வி.யூ.எஸ்., என்டோ வாஸ்குலர் இன்டர்வென்சன் லைக், பெரிபேரல் வாஸ்குலர் இன்டர்வென்சன்ஸ், உலக தரம் வாய்ந்த அதி நவீன கேத்லேப் வசதி மற்றும் அதி நவீன ஐ.சி.சி.யூ., மருத்துவ அவசர ஊர்தி, நவீன ரத்த பரிசோதனை ஆய்வகம், இ.சி.ஜி., எக்கோ, டி.எம்.டி., ஹோல்ட்டர் மானிடர் வசதி கள் உள்ளன.

    ஏழை எளிய மக்கள் பயன்பெரும் வகையில் தமி ழக முதலமைச்சரின் விரி வான காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை, தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், இ.எஸ்.ஐ. பயனாளிகள், பி.எஸ்.என்.எல். பணியாளர் கள் மற்றும் அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவ னங்களின் பயனாளி களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ப தனை தேவகி சிறப்பு மருத்து வமனையின் சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர் சே.ரூபஸ் டிமல் தெரிவித் தார்.

    மேலும் தகவல் மற்றும் தொடர்புக்கு டாக்டர். சே.ரூபஸ் டிமல், சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர், தேவகி சிறப்பு மருத்துவமனை, அர சரடி, மதுரை-16 என்ற முகவரியிலும், முன்பதிவிற்கு 0452 2288841, அவசர சிகிச் சைக்கு 81900 34500, மேலும் தகவல்களுக்கு 96006 00888 ஆகிய எண்களை அழைக்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    உலக இருதய தினத்தை முன்னிட்டு கால்வின் மருத்துவமனை சார்பில் நாகர்கோவிலில் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நாளை மறுநாள் (29-ந்தேதி) நடைபெற உள்ளது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆண்கள், பெண்கள், 14-வயதுக்குட் பட்டவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என போட்டிகள் நடக்கிறது.

    29-ந்தேதி காலை 5 மணிக்கு போட்டியாளர்கள் பதிவு செய்யப்பட்டு காலை 6 மணிக்கு பட்டகசாலியன் விளை கால்வின் மருத்துவமனையில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்குகிறது. போட்டி யில் பங்கேற்ப வர்களுக்கு டி-சார்ட், காலை உணவு, மெடல் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்ப வர்களுக்கு ரொக் கத்தொகை வழங்கப் படுகிறது. முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கி றது. இதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை கால்வின் மருத்துவமனை சார்பில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×