search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன்"

    • தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன.
    • கடலில் நீந்திக்கொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததில் உயிரிழந்தனர்

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் மரியுபோல், மெலிடோபோல் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. அங்கு தங்களது ராணுவ நிலைகளை அமைத்துள்ளனர். தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ரஷியாவின் ராணுவ தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷியா கைப்பற்றிய மெலிடோபோல் நகரில் தனது துணை ராணுவ தளத்தை அமைத்துள்ளது. இங்கிருந்து உக்ரைனின் மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த ராணுவ தளத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ரஷிய ராணுவம் தளம் மீது குண்டுகள் வீசி தாக்கப்பட்டது. ராணுவ தளத்துக்கு செல்லும் பாலம் தகர்க்கப்பட்டது.

    இதுகுறித்து கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஜி கெய்டே கூறும்போது, "ரஷியாவின் ராணுவ தளம், துல்லியமான தாக்குதல் மூலம் அழிக்கப் பட்டது என்று தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய கூட்டாளியான பிரிகோஜினுடன் தொடர்புடையதாக கூறப்படும் வாக்னர் ராணுவ குழுவினர், மெலிடோபோல் நகரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஒடேசா நகரில் கடலில் நீந்திக்கொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததில் உயிரிழந்தனர் என்றும் வெடிக்காத கண்ணி வெடிகள் இருப்பதால் கடற்கரைக்கு செல்வோர் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது.
    • உக்ரைன், மால்டோவாவை வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

    பிரஸ்ஸல்ஸ்:

    நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனென்றால் உறுப்பு நாடு என்றால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும்.

    இதற்கிடையே, உக்ரைன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று விண்ணப்பம் கொடுத்துள்ளது. அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மால்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

    • உச்சி மாநாட்டின்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகப் பிரிவின் பரிந்துரை 27 நாடுகளின் தலைவர்களால் விவாதிக்கப்படும்.
    • அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகமனதான ஒப்புதல் தேவை.

    உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான நீண்ட பாதையில் உறுப்பினராகும்.

    அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் உச்சி மாநாட்டின்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகப் பிரிவின் பரிந்துரை 27 நாடுகளின் தலைவர்களால் விவாதிக்கப்படுகிறது.

    அணுகல் பேச்சுக்களை தொடங்குவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகமனதான ஒப்புதல் தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.

    • உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன் ரத்தாகுமா? என்ற வெங்கடேசன் எம்.பி. கோரிக்கைக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
    • மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன் ரத்தாகுமா?

    மதுரை

    உக்ரைன் நாட்டில் படிக்கும் இந்திய மாண வர்களின் படிப்பு அங்கு நடந்து வரும் போரால் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதற்கு மத்திய மந்திரி பகவத்கரத் பதில் அளித்துள்ளார். அதில் "வெளியுறவு அமைச்சக கணக்குப்படி 22 ஆயிரத்து 500 இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வந்தனர். ரஷ்யா வுடன் போர் காரணமாக அவர்கள் மத்திய அரசின் "ஆபரேசன் கங்கா" திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

    அங்கு நிலைமை சீரடைந்தவுடன் எல்லா தாக்கங்களையும் மதிப்பிட்டு, தீர்வுகளுக்கான வழிகளை பரிசீலிப்போம். இடைக்கால நடவடிக்கை யாக, நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன் தொடர்பாக ஆய்வு செய்யும்படி இந்திய வங்கியாளர் கூட்டமைப்பை அறிவுறுத்தி உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெங்க டேசன் எம்.பி கூறுகையில், மத்திய மந்திரியின் பதி லில் நம்பிக்கை தரும் வார்த்தைகள் இருந்தாலும், முடிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உக்ரைன் போரை கல்விக் கடன் ரத்து பிரச்சினை யுடன் இணைக்காமல், ஏற்கனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ள மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    ×