search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் போர்"

    • காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு விமானங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
    • இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலாக நடந்து வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான ராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக ராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பல கொலைகள் நிகழ்ந்த காசா எல்லைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அங்கு பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்தது. இந்த ஆயுதங்கள் ஒருகுறிப்பிடத்தகுந்த தாக்குதல் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனிடையே இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, எதிர்க்கட்சித்தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த அறிவிப்பு வெளியானது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து வடக்கு நகரமான மாலோட்- தர்ஷிகாவில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக்கொள்ளுமாறும், ஊடுருவல் சாத்தியம் குறித்து எச்சரிக்கும்படியும் இஸ்ரேலிய முகப்புக் கட்டளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி வருகின்றன, உயிரிழப்புகள் பற்றிய உறுதியான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

    • காசா முழுவதும் குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்துவிட்டது.
    • இஸ்ரேலின் தாக்குதலால் காசாவிலுள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகிறது.

    பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.

    இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கிறது. காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தேடி தேடி வேட்டையாடி வருகின்றனர்.

    காசா முழுவதும் குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்துவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலால் காசாவிலுள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகிறது.

    இந்நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுடன் துணை நிற்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள வீடியோவில்," பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் நியாப்படுத்த முடியாது.

    மக்களை காக்க, தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ள தாக்குதலுக்கு பதிலடி தர இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும்.

    தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உதவுவோம்" என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

    • உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் என அனைத்தையும் காசாவிற்கு கொண்டு செல்ல இஸ்ரேல் தடை.
    • மின்சாரம் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

    காசாவில் 5வது நாளாக ஹமாஸ் படைகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதைதொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு- எதிர்க்கட்சி தலைவர் பென்னி காண்ட்ஸ் சுமார் 3 மணி நேரமாக ஆலோசனை. போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், காசாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிலையம் முடங்கியது. இதன் எதிரொலியால், காசா இருளில் மூழ்கியது.

    உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் என அனைத்தையும் காசாவிற்கு கொண்டு செல்ல இஸ்ரேல் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

    மின்சாரம் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

    • எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம் என தலைப்பிட்டு உள்ளார்.
    • நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

    பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். 5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

    இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழியே தாக்குதல் நடத்த கூடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

    எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம் என தலைப்பிட்டு உள்ளார். இந்நிலையில், துருக்கியின் தேசிய கல்வி துறையின் துணை மந்திரி நஜிப் இல்மாஸ், நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

    அதில், ஒரு நாள், உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். நீங்களும் மரணம் அடைவீர்கள் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    • காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    • 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது.
    • 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் விரைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    1973-ம் ஆண்டு யோம் கிப்பூர் போரின்போது, 4 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டதே அதிக எண்ணிக்கையாக இருந்தது என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

    இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் ஏற்பட்டு வரும் தொடர் சண்டையில் 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.

    இதுதவிர, நேதன்யாகுவுக்கு தெற்கே மற்றும் மத்திய நெகேவ் பகுதிக்கு வடக்கே வர்த்தக நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வெடிகுண்டு புகலிடங்களுக்கான வசதிகள் உடனடியாக கிடைக்குமென்றால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தலாம் என ராணுவம் அனுமதித்து உள்ளது.

    இதேபோன்று, இந்த பகுதிகளில், வெளியே 10 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கங்களில் 50 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.

    ஜெருசலேம்:

    காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.

    இந்தநிலையில், காசா மருத்துவமனைகளில் 2,000 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள், மருந்துகளுக்கு தட்டுப்பாடு, தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேதம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • இஸ்ரேல் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்படும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
    • ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர்.

    இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் இஸ்ரேல் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்படும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. வேன், ஜீப் உள்பட பல வாகனங்களில் பெண்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் காணப்பட்டன. அந்த வீடியோவில் துப்பாக்கிகளுடன் ஹமாஸ் பயங்கரவாதிகள் மிரட்டுவதும் இடம் பெற்றுள்ளது.

    இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர். இந்த செயலுக்காக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுத்தே தீர வேண்டும். எங்கள் நாட்டு மக்களை காக்க நாங்கள் அதிகபட்ச அதிரடிகளில் ஈடுபடுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது.
    • சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதார விவகாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. போர் நீடித்து மேலும் அதிகமாகும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை.
    • போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளனர்.

    சமீபத்திய மின்னல் வேக தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.

    2014-ல் இது குறித்து உளவுத்துறை எச்சரித்தும் இஸ்ரேல் அலட்சியப்படுத்தியது. அதன் விளைவுகளை தற்போது இஸ்ரேல் கண்டு வருகிறது. ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் பயங்கரவாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

    அவர்கள் வெளிநாடுகளில் இருந்து, ஏவுகணைகளை தயாரித்தல், ஏவுதல், மனித வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன தொழில்நுட்பத்தை கையாள பயிற்சி பெற்றுள்ளனர்.

    சமீபத்திய "ஆபரேஷன் ஆல்-அப்பா புயல்" போன்ற அம்சங்களைக் கொண்டிருக்க ஹமாஸ் தெளிவான திட்டங்களை வகுத்துள்ளது.

    குறிப்பாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை. காற்றில் பறந்து வந்து ஏவுகணைகளை வீசுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பலர் தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. அவர்கள் நகரங்களில் இறங்கி, கண்ணில் படும் பொதுமக்களையும், படை வீரர்களையும் பணயக்கைதிகளாக பிடித்தனர்.

    இப்படி ஊடுருவிய நூற்றுக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடர்கள் பயங்கரவாதிகளிடம் இருப்பதாக நம்பப்படுகிறது.

    கடலில் இருந்து சிறிய படகுகளில் காசா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மறுபுறம், பயங்கரவாதிகளும் பிக்-அப் டிரக்குகளில் கனரக எந்திர துப்பாக்கிகளுடன் இஸ்ரேலுக்குள் விரைந்தனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு விமானம் தாங்கி கப்பலை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்:-

    அமெரிக்காவின் போர்டு கேரியர் கடற்படை குழு இஸ்ரேல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.

    இந்த கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. அதே போல் பயங்கரவாதிகளுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குபவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும்.

    வர்ஜீனியாவை தளமாகக்கொண்ட விமானம் தாங்கி கப்பல் தற்போது மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளது.

    இதில் யுஎஸ்எஸ் நார்மண்டி, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர், யுஎஸ்எஸ் ராம்பேஜ், யுஎஸ்எஸ் கார்னி, யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் மற்றும் எப்-35, ஏபி-15, எப்-16 மற்றும் ஏ-10 போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமெரிக்காவின் இந்த அதிநவீன போர்க்கப்பல் எதிரிகள் உள்ள பகுதிகளை நாசமாக்கும் சக்தி கொண்டது. பயங்கரவாதிகள் உள்ள இடங்களை குறி வைத்து துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் இதில் உள்ளன. மேலும் அதிநவீன கண்காணிப்பு கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரிகளை அமெரிக்க கப்பல் படை துல்லியமாக கணித்து அதற்கேற்றார் போல் தாக்குதல்களை நடத்தும். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.

    • சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகுதான் இஸ்ரேல் தனது பதிலடியை ஆரம்பித்தது.
    • பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு வசதியாக 20 ஆயிரம் பேரை இஸ்ரேல் இடமாற்றம் செய்துள்ளது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென போர் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 22 இடங்களில் ஊடுருவி அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் முக்கிய இடங்களில் குண்டுகளை வீசினார்கள்.

    பல இடங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றி பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். காசா பகுதிக்குள் அப்படி கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பிணை கைதிகள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

    6.35 மணி முதல் 8.30 மணிக்குள் சுமார் 2 மணி நேரத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் முதலில் இஸ்ரேல் அதிர்ச்சியால் நிலை குலைந்தது. அந்த நாட்டின் வான் மண்டல பாதுகாப்பு கை கொடுக்காததால் இஸ்ரேலின் பல பகுதிகள் தரைமட்டமானது.

    சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகுதான் இஸ்ரேல் தனது பதிலடியை ஆரம்பித்தது. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தலைமையகம் உள்பட பல கட்டிடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. அடுத் தடுத்து ஏவுகணை தாக்கு தலையும் இஸ்ரேல் மேற்கொண்டது.

    நேற்று 2-வது நாளாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்தது. இதில் இஸ்ரேலில் சுமார் 700 பேரும், காசாவில் 500 பேரும் என சுமார் 1,200 பேர் பலியானார்கள். 10 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) 3-வது நாளாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நீடித்தது. இன்று அதிகாலை இரு தரப்பினரும் ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதலை நடத்தினார்கள். இதற்கிடையே 22 வழிகளில் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை இன்று இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.

    இதற்காக இஸ்ரேல் தெற்கு பகுதிகளுக்கு கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இஸ்ரேல் தெற்கு பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இஸ்ரேல் தெற்கு பகுதிக்கும் காசாவுக்கும் இடையே உள்ள பகுதி மிக பயங்கரமான போர்க்களமாக மாறி உள்ளது.

    பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு வசதியாக 20 ஆயிரம் பேரை இஸ்ரேல் இடமாற்றம் செய்துள்ளது. பொதுமக்களை ராணுவ பதுங்கு அரங்குகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்து உள்ளனர். எனவே வரும் நாட்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் முன்களத்தில் நிற்கும் இஸ்ரேல் வீரர்களில் இதுவரை சுமார் 54 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் நீண்ட காலம் போருக்கு தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே போர் மேலும் உக்கிரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    ×