search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கடத்தல்"

    • சங்கர் முருகன் வீட்டில் கோமதி இருந்த போது கோமதியின் தாத்தா பவுன் பாண்டியன், சித்தப்பா அனில், அம்மா ராஜம்மாள், சித்தி அனிதா உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து கோமதியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
    • சங்கர் முருகன் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால் பண்ணை தெருவை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் சங்கர் முருகன் (23).

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகள் கோமதி (20). உறவினர்களான இவர்கள் இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கோமதியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    சங்கரன்கோவிலில் உள்ள சங்கர் முருகன் வீட்டில் கோமதி இருந்த போது கோமதியின் தாத்தா பவுன் பாண்டியன், சித்தப்பா அனில், அம்மா ராஜம்மாள், சித்தி அனிதா உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து கோமதியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சங்கர் முருகன் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம் பெண்ணை கடத்தி உல்லாசமாக இருந்த கிராம நிர்வாக அலுவலரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    • பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் பேசிக் கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் சேடப்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக இளையராஜா பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய அலுவலகத்திற்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு திருமணமான இளம்பெண் வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இளம்பெண்ணை இளையராஜா படம் எடுத்து உள்ளார்.

    அந்த படத்தை காட்டி தன்னிடம் உல்லாசமாக இருக்க இளையராஜா இளம்பெண்ணை மிரட்டி உள்ளார். ஆனால் இளம்பெண் இதற்கு ஒத்து வராத நிலையில் மகாபலிபுரம் உல்லாச விடுதிக்கு அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பலமுறை அவரை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிய நிலையில் அவர் மகாபலிபுரம் விடுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையெடுத்து காவல் துறையில் புகார் அளித்து இளம்பெண்ணை மீட்டு வந்தனர். அந்த இளம்பெண் தன்னை இளையராஜா பலமுறை பலாத்காரம் செய்ததாக கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடிவருகின்றனர்.

    திருமண ஆசை வார்த்தை காட்டி இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் ஈரோடு மகளிர் போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை நல்லபாளி செல்வராஜ் மகன் கார்த்திக் (வயது 22). திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

    சென்னிமலை முருங்க தொழுவு பகுதியில் தாய் பராமரிப்பில் 17 வயது ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவருக்கு திருமண ஆசை காட்டி, வீட்டை விட்டு தன்னுடன் அழைத்து சென்றார். காரத்திக் .

    அப்பெண்ணின் தாய் தனது, மகள் காணாமல் போனது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னிமலை பகுதியில் இருவரையும் பிடித்தனர்.

    இருவரையும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அப்பெண்ணுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது பெற்றோரிடம் பெண் ஒப்படைக்கப்பட்டார்.

    திருமண வயதை அடையாத பெண்ணை திருமண ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்ற கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் ஈரோடு மகளிர் போலீசார் கைது செய்தனர்.

    ×