search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச முகாம்"

    • மேற்கு தெரு ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்
    • காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

     தஞ்சாவூர்:

    கலைஞரின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அனு மருத்துவமனை சிவகுமார் எம்.டி., டி.எம். மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர் எஸ்.சி. மேத்தா ஆகியோர் இணைந்து நாளை 3-ந்தேதி தஞ்சாவூர் மேற்கு தெரு ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்.இந்த மருத்துவமுகாம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு சுகாதார சோதனைகள்,ஈசிஜி, ரத்த குளுக்கோஸ் சோதனை உள்ளிட்ட சோதனைகளும், இலவச மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த இலவச மருத்துவ சேவையில் அனைவரும் பங்கேற்று பயன் அடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

    • 250 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்கம், ஜேஜே கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம் சின்ன கடை தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ தாமோதரன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார், கௌரவ தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.

    முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஆர்.ஜி.ரமேஷ் டாக்டர் ஜெயசுதா, முகாமில் கலந்து கொண்ட 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் ரேவதி பாலாஜி, செயலாளர் வடிவேல், பொருளாளர் தண்டபாணி என்கின்ற கணேஷ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • முகாமில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி :

    அவிநாசி அருகே கருவலூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூா் ஏங்கா், கருவலூா் நண்பா்கள் குழு, பசுமை விசுவாசம் அமைப்பு, திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் கருவலூா் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், துணைத் தலைவா் ஆறுமுகம், மன்ற உறுப்பினா் வாணி மகேஷ்வரி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

    இந்த முகாமை கருவலூா் நண்பா்கள் குழு, பசுமை விசுவாசம் அறக்கட்டளை நிா்வாகிகள் கபில்தேவ், அருள்குமாா், செல்வம், முத்துசாமி, பாலசந்திரன், மணி, கோபிநாத், சந்தோஷ்குமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். முகாமில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நிறைவாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ×