கருவலூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.முகாமில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவிநாசி :

அவிநாசி அருகே கருவலூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூா் ஏங்கா், கருவலூா் நண்பா்கள் குழு, பசுமை விசுவாசம் அமைப்பு, திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் கருவலூா் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், துணைத் தலைவா் ஆறுமுகம், மன்ற உறுப்பினா் வாணி மகேஷ்வரி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இந்த முகாமை கருவலூா் நண்பா்கள் குழு, பசுமை விசுவாசம் அறக்கட்டளை நிா்வாகிகள் கபில்தேவ், அருள்குமாா், செல்வம், முத்துசாமி, பாலசந்திரன், மணி, கோபிநாத், சந்தோஷ்குமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். முகாமில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நிறைவாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com