search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருக்கன்குடி மாரியம்மன்"

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி கடைசி வெள்ளி திருவிழா நடைபெறுகிறது.
    • நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும், பல்வேறு வாகனங்களிலும் வந்து வழிபாடு செய்வார்கள்.

    இந்த கோவிலுக்கு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக ஆடி வெள்ளி திருவிழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை வீதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் எஸ்.பி தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதம் என்பார்கள்.
    • ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருவிழா கோலாகலத்தை காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்தலில் தினம், தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபடி உள்ளனர்.

    தீ சட்டி எடுக்கவும், மாவிளக்கு போடவும், மொட்டை அடித்துக்கொள்ளவும் தினந்தோறும் பக்தர்கள் வந்தபடி இருக்கிறார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. என்றாலும் தை, பங்குனி, ஆடி ஆகிய 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் வகையில் பக்தர்கள் அலை, அலையாக வருவதை காணலாம். இந்த 3 மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை நாட்களில் மாரியம்மன் அருள் பெற திரளும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும்.

    இந்த 3 மாதம் தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது. பெரிதுவாக ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதம் என்பார்கள்.

    தேவலோகத்தில் தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் பகல் பெரிழுதுவாகவும், ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் இரவு பெரிழுதுவாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஆடி மாதம் பகல் முடிந்து இரவு நேரம் தொடங்கும் காலமாக கருதப்படுகிறது.

    இதை தட்சிணாயன புண்ணிய காலம் என்பார்கள். இத்தகைய புண்ணிய காலத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் மட்டுமே ஊர் மத்தியில் உள்ள உற்சவ அம்மன் வெளியில் வீதி உலா வருகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நித்தம், நித்தம் தன்னைத் தேடி வரும் பக்தர்களை தானே தேடிச் சென்று தரிசனம் தருவது தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.

    ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3-வது வெள்ளிக்கிழமையன்று கொடியேற்ற வைபவம் நடைபெறும். அன்று காலை 5 மணியளவில் இருக்கன்குடி கிராம பெரிது மக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப்பிலைக்கொடி கட்டுவார்கள். இதில் நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பெரிதுமக்கள் கலந்து கொள்வார்கள்.கடைசி வெள்ளிக்கிழமையன்று பகலில் ரிஷப வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் கோவிலில் இருந்து எழுந்தருள்வாள். பிறகு வீதி வலம் வருவாள்.

    நதியில் அம்மன் உலா வரும் போது மக்கள் திரளாக நின்று வணங்குவார்கள். பிறகு மூலவர் கோவிலை சென்றடையும் அம்மன் இரவு முழுவதும் அங்கு சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவாள்.

    மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மேல் மூலவர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர் மத்தியில் இருக்கும் உற்சவர் கோவிலை மீண்டும் அம்மன் சென்று அடைவாள். அப்போது பக்தர்கள் மேள, தாளம், நகரா ஒலி எழுப்ப உற்சவத்தை சிறப்பு செய்வார்கள்.

    ஆடி பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

    • அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கத்தை காட்டிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல சாத்தூர் மாரியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் அருகில் பத்திரகாளியம்மன் கோவில், படந்தால் துர்க்கை அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ×