search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trustee"

    • சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அறங்காவலரை நியமிக்க மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
    • மனுதாரர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இதன் நிர்வாக அறங்காவலர் ஆனந்த் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் தேவாங்கர் சமூகத்திற்கு பாத்தி யப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு குத்தகை விடப்பட்டது. ஆனால் அவர்கள் நிலத்தை குத்தகை காலம் முடிந்து ஒப்ப டைக்காமல் விற்பனை செய்துள்ளனர். அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மனுதாரர் புகார் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாக அறங்காவலர் ஆனந்தை நீக்கி அதற்கு பதிலாக வேறு நபரை இந்து சமய அறநிலை நியமித்தது. இதற்கு தடை விதிக்க கோரி ஆனந்த் மதுரை ஐகோர்ட்டை நாடினார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி தனது உத்தரவில் மனுதாரர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் புதிதாக நிர்வாகிகளை நியமித்து குழப்பி வருகிறார்கள்.

    எனவே நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கோவில் அறங்காவலராக புதிய நபரை நியமிக்க தடை விதிக்கப்படுகிறது என தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

    • கோவிலுக்கு அறங்காவலர் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது.
    • இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அறங்காவலர் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது. இதில் அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் குழு தலைவராகவும், கருணாம்பிகா பொன்னுசாமி, ரவி பிரகாஷ், கார்த்திகா, ஆறுமுகம், ஆகியோர் அறங்காவலர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

    புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
    • இதுவரை 2 கட்டமாக விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு அதற்காக விண்ணப்பம் பெற்று வருகிறது. இதுவரை 2 கட்டமாக விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 60 கோவில்களுக்கு தனிநபர் அறங்காவலர் மற்றும் சில கோவில்களுக்கு 3நபர் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட கோவில்களுக்கு மூன்றாம் கட்டமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்கள், கோவில் அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

    அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், முதல் கட்டமாக 200 கோவில்கள்,2ம் கட்டமாக, 500 கோவில்கள் என கோவில்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. பரிசீலனை செய்து நியமனமும் நடந்து வருகிறது.விடுபட்ட 568 கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த கோவில்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி கடைசி வெள்ளி திருவிழா நடைபெறுகிறது.
    • நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும், பல்வேறு வாகனங்களிலும் வந்து வழிபாடு செய்வார்கள்.

    இந்த கோவிலுக்கு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக ஆடி வெள்ளி திருவிழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை வீதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் எஸ்.பி தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×