search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறங்காவலர் குழு நியமனம் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்

    அறங்காவலர் குழு நியமனம் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    • 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
    • இதுவரை 2 கட்டமாக விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு அதற்காக விண்ணப்பம் பெற்று வருகிறது. இதுவரை 2 கட்டமாக விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 60 கோவில்களுக்கு தனிநபர் அறங்காவலர் மற்றும் சில கோவில்களுக்கு 3நபர் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட கோவில்களுக்கு மூன்றாம் கட்டமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்கள், கோவில் அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

    அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், முதல் கட்டமாக 200 கோவில்கள்,2ம் கட்டமாக, 500 கோவில்கள் என கோவில்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. பரிசீலனை செய்து நியமனமும் நடந்து வருகிறது.விடுபட்ட 568 கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த கோவில்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×