search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசிலிங்கேசுவரர் கோவில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு
    X

    கூட்டம் நடைபெற்ற காட்சி.

    அவினாசிலிங்கேசுவரர் கோவில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு

    • கோவிலுக்கு அறங்காவலர் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது.
    • இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அறங்காவலர் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது. இதில் அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் குழு தலைவராகவும், கருணாம்பிகா பொன்னுசாமி, ரவி பிரகாஷ், கார்த்திகா, ஆறுமுகம், ஆகியோர் அறங்காவலர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

    புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×