என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இண்டிகோ விமானம்"
- ஓடுபாதையில் விமானம் சென்றபோது தீப்பொறிகள் வெளிப்பட்டது.
- விமான பயணிகள் பத்திரமாக இருப்பதாக தகவல்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு இரவு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் (6E-2131)எஞ்சின் பகுதியில் தீப் பொறி பறந்ததால் மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. விமானம் வானில் பறப்பதற்காக ஓடுபாதையில் சென்றபோது தீப்பொறிகள் வெளிப்படும் வீடியோ ஒன்றை அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது சமூக வளைதளத்தில் வைரலானது. முன்னதாக வியாழன் அன்று, டெல்லிக்கு புறப்பட்ட மற்றொரு விமானம் மீது பறவை மோதியது, இதன் காரணமாக அந்த விமானம் இஞ்ஜின் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- விமானம் புறப்பட இருந்த நிலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்,
- பயணிகள் வெளியேற்றப்பட்ட பின்னர் விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.
பாட்னா:
இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்றிரவு 8.20 மணிக்கு, பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார், விமானம் முழுவதையும் சோதனை இடப்பட்டது.
இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது புரளி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு புரளியை கிளம்பியதாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்