search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர் உரை"

    மகாராஷ்டிர மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. #MahaBudgetSession #MaharashtraAssembly
    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டமன்ற கூட்டு அமர்வில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். ஆனால் ஆளுநர் உரையை தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.

    ஆளுநர் உரையை புறக்கணித்தது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கூறுகையில், ‘ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்ட பதவி. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆளுநர் பேசியதால் சட்டமன்றத்தில் அவர் ஆற்றும் உரையானது மாநில நலனுக்கான உரையாக இருக்குமா? அல்லது ஆர்எஸ்எஸ் நலனுக்கான உரையாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் அவரது உரையை புறக்கணிக்க முடிவு செய்தோம்’ என்றார்.

    நாக்பூரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ஆஎஸ்எஸ் அமைப்பானது சிறந்த மதச்சார்பற்ற அமைப்பு என்றும் தனிநபரின் நம்பிக்கைகளுக்கு எப்போதும் மதிப்பு அளிக்கும் அமைப்பு என்றும் பாராட்டினார்.

    இன்று காலை சட்டசபை கூடுவதற்கு முன்னதாக, ஆளுநரின் பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில உறுப்பினர்கள், பாஜக தலைமையிலான மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். #MahaBudgetSession #MaharashtraAssembly
    தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். #TNAssemblySession
    சென்னை:

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம், பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக கடந்த 18-ம் தேதி ஆளுநர் அறிவித்தார்.



    இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் ஜனவரி 2-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இக்கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீது விவாதங்கள் நடைபெறும். அதன்பின்னர், விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார். #TNAssemblySession

    ×