search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra Assembly"

    • ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று மனோஜ் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
    • வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.

    புதுடெல்லி:

    மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜாரங்கே பாட்டீல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவு சட்டசபையில் இன்று நிறைவேறியது.

    இதன்மூலம் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் கூடுதல் இடஒதுக்கீடு பெற உள்ளனர்.

    • அஜித் பவார் மந்திரி சபையில் இணைந்த பின் நடைபெறும் முதல் சட்டமன்ற தொடர்
    • எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார் பட்னாவிஸ்

    மகாராஷ்டிர மாநில மழைக்கால சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை மூன்று வாரங்கள் நடைபெற இருக்கிறது.

    ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுப்படுத்தி தனது ஆதரவாளர்களுடன் அஜித் பவார் இணைந்த பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இதுவாகும்.

    இதுவரை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தது. அஜித் பவார் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்தார். தற்போது அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியா? அல்லது ஆளுங்கட்சியா? என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், சரத் பவார் கட்சி தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்த நிலையில்தான் இன்ற சட்டமன்றம் கூடுகிறது.

    இந்த மழைக்கால தொடரில் 24 மசோதாக்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் 10 மசோதாவிற்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கிவிட்டது. 14 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இவைகள் சட்டசபையில் முன்வைக்கப்படும்.

    ஒரு மசோதா சட்டமன்ற கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஒரு மசோதா இரண்டு அவைகளின் கூட்டுக்குழுவில் நிலுவையில் உள்ளது. இதுவும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    24 மசோதாக்கள் தவிர, 6 திருத்தப்பட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    சட்டசபை கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் நேற்று ஷிண்டே, பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ''தற்போது எங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்த மாட்டோம். எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் மக்கள் நலனுக்கான அனைத்து கேள்விகள் குறித்தும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்'' என பட்னாவிஸ் தெரிவித்தார்.

    சட்டமன்ற கூட்டத்திற்கு முன் அனைத்துக் கட்சிகளுக்கு தேனீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிர மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. #MahaBudgetSession #MaharashtraAssembly
    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டமன்ற கூட்டு அமர்வில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். ஆனால் ஆளுநர் உரையை தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.

    ஆளுநர் உரையை புறக்கணித்தது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கூறுகையில், ‘ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்ட பதவி. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆளுநர் பேசியதால் சட்டமன்றத்தில் அவர் ஆற்றும் உரையானது மாநில நலனுக்கான உரையாக இருக்குமா? அல்லது ஆர்எஸ்எஸ் நலனுக்கான உரையாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் அவரது உரையை புறக்கணிக்க முடிவு செய்தோம்’ என்றார்.

    நாக்பூரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ஆஎஸ்எஸ் அமைப்பானது சிறந்த மதச்சார்பற்ற அமைப்பு என்றும் தனிநபரின் நம்பிக்கைகளுக்கு எப்போதும் மதிப்பு அளிக்கும் அமைப்பு என்றும் பாராட்டினார்.

    இன்று காலை சட்டசபை கூடுவதற்கு முன்னதாக, ஆளுநரின் பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில உறுப்பினர்கள், பாஜக தலைமையிலான மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். #MahaBudgetSession #MaharashtraAssembly
    ×