மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேறியது மராத்தா இட ஒதுக்கீடு மசோதா

ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று மனோஜ் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேறியது மராத்தா இட ஒதுக்கீடு மசோதா
Published on

புதுடெல்லி:

மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜாரங்கே பாட்டீல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவு சட்டசபையில் இன்று நிறைவேறியது.

இதன்மூலம் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் கூடுதல் இடஒதுக்கீடு பெற உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com