search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்ப சுகாதார நிலையம்"

    • தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய (ஆர்.சி. எச்) துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார், மாநிலத் துணைத் தலைவர் நிலா ஒளி, மாநில பொருளாளர் ராஜலட்சுமி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிமுத்து வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பிரச்சார செயலாளர் சிவகுரு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் சிங்காரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதம் ரூ..1500 மட்டுமே வழங்கி, வரும் இன்றைய காலச் சூழ்நிலையில் குடும்பம் நடத்த முடியாத அவல நிலையில் உள்ளனர். அரசு விதிப்படி 8 மணி நேர வேலை, வார விடுமுறை, அரசு விடுமுறை, இலவச சீருடை, இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கிளியனூர் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    • மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கிளியனூர் ஊராட்சியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு சரியான நேரத்தில் வருகை புரிந்து வருகிறார்களா? என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை வழங்கும் பிரிவு, மருந்துகள் இருக்கும் அறை, ஆய்வுக்கூடம், ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், அவ்வப்பொழுது மருந்து, மாத்திரைகள் போதிய அளவு உள்ளதா? என்பதை டாக்டர்கள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தியதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    இதையடுத்து பிரசவ வார்டில் ஆய்வு மேற்கொண்டு குழந்தை பிறந்த தாய்மார்களிடம் தாயும், சேயும் நலமாக உள்ளீர்களா? என கேட்டறிந்து, தாயும், சேயும் நலமுடன் இருந்திடும் வகையில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குவதுடன், தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கான மாதாந்திர பரிசோதனை சரியான காலகட்டத்தில் மேற்கொள்ள டாக்டர்கள் தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, வல்லம் ஊராட்சி ஒன்றியம், நாட்டார்மங்கலம் அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் காலி இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்திட அறிவுறுத்தியதுடன், தினமும் குழந்தைகளுக்கு சத்தான சுகாதாரத்துடன் கூடிய உணவினை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் வசிப்பவர்கள், கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
    • மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள், லேப் ஆகியவை போதிய அளவு இல்லை.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா கணியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்தில் அரசுக்கு முன் வைக்கப்பட்ட தீர்மான விபரம் வருமாறு: காரத்தொழுவு, வஞ்சிபுரம், கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் வசிப்பவர்கள், கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இங்கு அடிப்படை சுகாதார நிலையத்திற்கு உண்டான கட்டமைப்பு மற்றும் உபகரணம் மட்டுமே உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள், லேப் ஆகியவை போதிய அளவு இல்லை. ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நோயாளிகளுடன் வருபவர்கள் காத்திருக்க இடவசதி இல்லை. இந்தப் பகுதியில் நடக்கும் விபத்துகளில் காயம் அடைபவர்கள் மற்றும் இதர நோயாளிகளுக்கு தகுந்த அளவில் படுக்கை வசதிகள் இல்லை. இதனால் மடத்துக்குளம் அல்லது உடுமலைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இ

    துபோன்ற குறைகளை அகற்றி கணியூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தொகையின் அளவிற்கு தகுந்த அளவில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அதற்கு தேவையான அளவில் கட்டிடம் கட்டுவது, மருத்துவர்கள், செவிலியர்கள், நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினர், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது.
    • 4 மாதம் முடிந்து 5-வது மாத கருவைச் சுமந்து வரும் கர்ப்பிணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனைக்கு செல்லும், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய குளுகோஸ் இல்லை என பல வாரங்களாக திருப்பி அனுப்பப்படுவதால், கர்ப்பிணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    திருப்பூர் கோவில்வழியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செய்யப்படுகிறது. இந்த சோதனைக்கு வரக்கூடிய கர்ப்பிணிகளுக்கு குளுகோஸ் சாப்பிடுவதற்கு கொடுக்கப்படும். அதை சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு கணக்கிடப்படும். இந்த சோதனையை செய்வதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறிவதுடன், அதற்குரிய மருந்துகளும் வழங்கப்படும். இந்த சோதனையை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் கருக் கலைப்பு ஆவதை தடுக்க முடியும், வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஏற்படக்கூடிய இதர பாதிப்புகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    இந்நிலையில் கோவில்வழியைச் சேர்ந்த 22 வயது, கர்ப்பிணி குளுகோஸ் ரத்த பரிசோதனை செய்வதற்காக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அங்குள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு குளுகோஸ் இருப்பு இல்லை, புதிதாக வந்தால்தான் கொடுக்க முடியும் என்று கூறி ரத்தபரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டனர். அவருடன் அவரைப் போலவே பலரையும் திருப்பி அனுப்பினர். அதன் பிறகு ஒரு வார காலம் கழித்து மீண்டும் அங்கு போயிருக்கிறார். அப்போதும் குளுகோஸ் வரவில்லை என்று அங்கிருந்த செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். எப்போது குளுகோஸ் வரும், எப்போது ரத்த பரிசோதனை செய்ய வர வேண்டும் என கர்ப்பிணிகள் கேட்டபோது அவர்களிடம் உரிய பதில் இல்லை. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி, கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 22 வயது கர்ப்பிணி உட்பட சிலர் சென்றனர். அப்போதும் குளூகோஸ் இல்லை என தெரிவித்து திருப்பி அனுப்பிவிட்டனர்.

    இது தொடர்பாக கர்ப்பிணிகளின் கணவன்மார்கள் கூறும்போது, " தற்போது 4 மாதம் முடிந்து 5-வது மாத கருவைச் சுமந்து வரும் கர்ப்பிணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சர்க்கரை அளவை கணிக்கும் குளுகோஸ் ரத்தப் பரி சோதனை செய்வார்கள் எனத் தெரியவில்லை. திருப்பூர் மாநகர் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. அரசு மருத்துவமனையின் சின்னச்சின்ன விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினாலே பொதுமக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும்" என்றனர்.

    ×