என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி"
விருத்தாசலம்:
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன்(36). இவர் தன்னுடைய 5 வயது அதிஸ்ரீ என்ற பெண் குழந்தையுடன் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த ஆம்புலன்ஸ் சீனுவாசன் மற்றும் அவரது மகள் மீது மோதியது. அப்போது சீனுவாசனும், அவரது மகளும் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தின் போது சீனுவாசன் கையில் இருந்த பெண் குழந்தை ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு லேசான காயமடைந்தது. இதில் சீனுவாசன் உடல் மீது ஆம்புலன்ஸ் ஏறிச்சென்றதால் அவர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார். உடனே விருத்தாசலம் போலீசார் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனுவாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்துக்குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்