search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்"

    • உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் தி.மு.க. சார்பிலும், தோழமை கட்சிகள் சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வேறு கருத்தை சொல்ல முடியாது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கான முன் முடிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டமசோதா குறித்து கவர்னர் எந்தவிதமான விளக்கமும் இதுவரை கேட்கவில்லை. அவசர கூட்டத்திற்கு அனுமதி கிடைத்து விட்டது.

    அதில் உள்ள ஷரத்துகள் தான் இதிலும் உள்ளன. சந்தேகம் ஏற்பட வாய்ப்பு இல்லை. கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான். இருந்தாலும் ஏன் மசோதாவுக்கு அனுமதி தராமல் வைத்து இருக்கிறார் என்று சொல்ல முடியாது.

    அதனால் கவர்னரை நானும் உள்துறை மற்றும் சட்டத்துறை செயலாளரும் நேரில் சென்று சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம். இன்றோ அல்லது நாளையோ சந்திக்க நேரம் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். இதுகுறித்து அவரிடம் விளக்கி எடுத்து கூறுவோம்.

    உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் தி.மு.க. சார்பிலும், தோழமை கட்சிகள் சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மனு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு சில பார்ட்டிகளில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

    எனவே தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்படும் மறு சீராய்வு மனு தமிழக அரசு மனுவாகத்தான் இருக்கும். எல்லா கருத்துக்களையும் உள்வாங்கி சிறப்பான சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அன்று பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல் முறையீடு செய்யும்போது தகுந்த வாதங்களை எடுத்து வைத்து ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர சட்ட பாதுகாப்பை தேடி தருவோம்.

    ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வேறு கருத்தை சொல்ல முடியாது. காங்கிரஸ் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளனர். எல்லோருக்கும் சட்ட போராட்டம் நடத்த உரிமை உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தடையை மீறி ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
    • பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஏராளமான பேர் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் அவலம் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. இந்த சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பலதரப்பில் இருந்தும் கோரிக்கை மனுக்கள் வந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் போதே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இதை எதிர்த்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டி சட்டத்தை ஏற்க இயலாது என்று ரத்து செய்துவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் மீண்டும் நடைபெற்று வந்தது. இதில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்தது.

    இந்தநிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மீண்டும் தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது.

    இக்குழு கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச்சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 7-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதன்படி நடைபெறும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி கடந்த 19-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    அன்றைய தினமே இந்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

    அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குடிமக்களின் மனநலத்தை பாதுகாக்கும் பொறுப்பும், பந்தயம் கட்டுதல் உள்பட எந்த வடிவத்திலும் சூதாட்டத்தின் தீய விளைவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசிற்கு உள்ளது.

    இதன் காரணத்தால் 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் மற்றும் 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில் தனிநபர் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை தடை செய்யும் நீண்டகாலக் கொள்கையை அரசு பேணி வருகிறது.

    இணைய வழி விளையாட்டுகளின் மீது புதிய சட்டத்தை இயற்றுவதற்கு, அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவானது அதன் அறிக்கையில், விளையாட்டு எதுவாயினும் இணைய வழி பதிவானது சீரற்ற வெளியீட்டு உருவாக்கி எதிலும் ஈடுபடாத வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகளின் நேர்வுகளைத் தவிர அந்த விளையாட்டின் இணைய வழியல்லாத பதிப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் சீரற்ற உருவாக்கியை உள்ளடக்கிய இணைய வழி வாய்ப்பு விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு தெரியும் என்பதால் அவை போலியான சீரற்ற உருவாக்கிகள் ஆகும்.

    மேற்கூறப்பட்ட குழுவின் அறிக்கை, அரசுப் பள்ளி மாணவர்களின் மீது இணைய வழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இதுகுறித்த ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள், பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பின்னர், அதன்படி உள்ள முடிவுகள் ஆகியவற்றை கவனமாக பரிசீலனை செய்த பின்னர் அரசானது, இணைய வழி சூதாட்டங்களை தடை செய்வது எனவும், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துவது எனவும் முடிவு செய்தது.

    அரசின் மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையாக இருந்தது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 4/2022) 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் நாள் அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு சட்டத்துறை அனுப்பி வைத்திருந்தது. இப்போது கவர்னர் ஆர்.என்.ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    ×