search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிபராசக்தி"

    • ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன.
    • எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது.

    ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன.

    இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள்.

    மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர்.

    சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர்.

    எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது.

    எனவே தான் மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.

    • நாளை இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது
    • ஏற்பாடுகளை புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி சக்தி பீடபக்தர்கள் செய்து வருகின்றனர்.

    பார்வதிபுரம் :

    நாகர்கோவில் புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி பீடத்தில் நவராத்திரி பூஜை கடந்த 15-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. தினமும் காலை அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கூட்டு வழிபாடு, வேள்வி பூஜை, பின்னர் மாலையில் கொலு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நாளை (20-ந்தேதி) காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு மகா இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு சென்று தாங்களே நேரடியாக அபிஷேகம் செய்யலாம். வருகிற 22-ந்தேதி 8-ம் நாளில் துர்கா அஷ்டமி சிறப்பு வழிபாடும், மாலை சக்தி பீடத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். 23-ந்தேதி சரஸ்வதி பூஜை அன்று சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளும் நடைபெறும். 24-ந்தேதி விஜயதசமி தினத்தன்று காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். மாலை 4 மணிக்கு அன்னை பாரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் நிகழ்ச்சியை தொடர்ந்து சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி சக்தி பீடபக்தர்கள் செய்து வருகின்றனர்.

    ×