என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கைது மனைவி மாமியார் மீது தாக்குதல்"
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் பாண்டி ரோட்டை சேர்ந்தவர் கோபால் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவருக்கும் மயிலம் செந்தூர்சாலையை சேர்ந்த நவநீதம் மகள் தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண்குழந்தை உள்ளன.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்பின்பு கோபாலுக்கு பாதிரா புலியூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அந்த பெண்ணுடன் அவர் கோவைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
இதை அறிந்த தனலட்சுமி மயிலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவை சென்று கோபாலையும் அந்த பெண்ணையும் மீட்டு அழைத்து வந்தனர். அதன்பின்பு போலீசார் கோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.
சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கோபாலுக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த தனலட்சுமி 2 குழந்தைகளுடன் தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் கோபால் ஆத்திரம் அடைந்தார். அவர் அடிக்கடி மாமியார்வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு தகராறு செய்து வந்தார்.
நேற்று மாலையும் கோபால் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்புமாறு நவநீதிடம் கூறினார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோபால் மாமியார் நவநீதத்தை தாக்கினார். இதை தட்டிக்கேட்ட தனலட்சுமியையும் கோபால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். பின்பு கோபாலும் அவரது உறவினர் மணிகண்டன் (26) என்பவரும் சேர்ந்து போனில் தனலட்சுமியையும், நவநீதத்தையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மயிலம் போலீசில் தனலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோபாலை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மணிகண்டனை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்