search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி பெருந்திருவிழா"

    • குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 22-ந்தேதி ஆடிப்பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடந்து வருகின்றன.
    • திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டுக்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 22-ந்தேதி ஆடிப்பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடந்து வருகின்றன.

    தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளார். ரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார்.

    முப்பெரும் தெய்வங்க ளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானு க்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் ஆறு கண்க ளுடன் காட்சி அளிக்கிறார்.

    இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளில் நடை பெறுவது வழக்கம். இதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. முதல் சனி வார திருவிழாவன்று காலை 11 மணிக்கு கலிப்பணம் கலிக்கப்படும். பின்பு கோவில் வளாகத்தைச் சுற்றிலும் சுத்தநீர் தெளித்து வழிபாடு நடைபெறும்.

    பூலாந்தபுரம் ராஜ கம்பளத்தார் திருவிழா வுக்கான சகுனம் பார்ப்பர். அப்போது காகம் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பறந்து செல்வது சுவாமி உத்தரவாக எடுத்துக் கொள்ளப் படும்.

    இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும். அன்றும், ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளிலும் இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆகஸ்ட் 4-ந்தேதி பகல் 12.30 மணிக்கு சிறப்பு நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு சனிதோறும் சக்தி கரகம் எடுத்தல், மஞ்சள் காப்பு சாத்துப்படி, சுவாமி புறப்பாடு, ஆக.7-ம் தேதி மாலை 6 மணிக்கு லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆக.19-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடையும்.

    விழாவை முன்னிட்டு கோவில் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வரிசையாக சென்று நெரிசலின்றி வெளி யேறும் வகையில் தனிப்பா தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டு க்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    • மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா நடந்தது.
    • வருகிற 24-ந்தேதி கொடியேற்றமும், 2-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை மற்றும் தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப் படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவில், கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திரு–விழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந்தி–ருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆடி திருவிழா வருகின்ற 24-ந்தேதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

    25-ந்தேதி காலையில் தங்க பல்லக்கு உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந்தேதி காலை பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்த–ருளுவார்.

    அன்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் 29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சக்கரமும் நடைபெறும். 31-ந்தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடை–பெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், 8 மணிக்கு மேல் 8.35 மணிக் குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லாக்கு, 2-ந்தேதி காலையில் தீர்த்த–வாரி, இரவில் சப்தா வர்ணம் புஷ்ப விமானம், 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 16-ந்தேதி ஆடி அமைவாசையை யொட்டி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகி–றது. ஆடிப்ெபருந்திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்கா–ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர்.

    ×