search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகப்பா கல்வி குழுமம்"

    • காரைக்குடி அழகப்பா கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 300-க்கும் அதிகமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அழகப்பா கல்வி குழுமத்தின் தாளாளர் டாக்டர் உமையாள் ராமநாத னின் 95-வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண் டாடப்பட்டது. அழகப்பா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர் கள், ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் ஊழி யர்கள் வரிசையாக அணிவ குத்து குழும தலைவர் டாக்டர் ராமநாதன் வைர வன், அறங்காவலர் தேவி அலமேலு வைரவன் ஆகி யோரின் வழிகாட்டுதலுடன் டாக்டர் உமையாள் ராமநா தன் அவர்களின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினர்.

    ஆச்சியின் பிறந்த நாளை நினைவு கூறும் வண்ணம் இலவச மருத்துவ முகாம் அழகப்பா நர்சிங் கல்லூரி யில் நடைபெற்றது. அதில் பொது மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு தொண்டை, மகப்பேறு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், பிசியோதெரபி, கண் மருத்துவம், ரத்தம் தானம் போன்ற பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மூலம் ரத்த தான முகாம் நடத்தப் பட்டது. முகாமில் 300-க்கும் அதிகமான பொதுமக் கள் பயன் பெற்றனர். குழும மேலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    • அழகப்பா கல்வி குழும தலைவர் டாக்டர் ராமநாதன் வைரவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    • சமுதாயத்துக்குப் பயனளிக்கும் நோக்கத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

    காரைக்குடி

    அமெரிக்காவில் தலை மைத்துவ மற்றும் தொழில் நுட்ப மாநாட்டின் போது விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பல்வேறு முன்னணி தொழில் முனை வோர், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

    தொழில்முனைவோரும், கல்வியாளரும், காரைக்குடி அழகப்பா கல்வி குழும தலைவருமான டாக்டர்.ராமநாதன் வைரவனுக்கு கல்வி, கலை மற்றும் புரவலர் ஆகியவற்றில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப் பட்டது.

    டாக்டர் வைரவன், வள்ளல் டாக்டர் ஆர்.எம் அழகப்ப செட்டியாரின் பேரன் ஆவார். சுகாதாரத் துறையில் நாற்பது ஆண்டு களுக்கும் மேலாக புகழ்பெற்ற தொழில்களை திறம்பட நடத்திக்கொண்டு வருகிறார். பன்னாட்டு நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகித்தவர்.

    காரைக்குடியில் உள்ள டாக்டர் அழகப்ப செட்டி யார் கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னையில் உள்ள அசோகா அறக் கட்ட ளை ஆகியவற்றின் தலைவர் செயலாளராக, டாக்டர் வைரவனின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை, கல்வி மற்றும் புரவலராக சாதனை களை புரிந்துள்ளதை, பல்வேறு கல்வி நிலைகளில் பயின்ற 8000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மேம்பாடுகளில் அறிந்து கொள்ளலாம்.

    விருது வழங்கும் விழா வில் டாக்டர் ராம நாதன் வைரவன் பேசுகை யில், 47 ஆண்டுகளில், காரைக் குடியின் மாற்றத்தில் என் தாத்தா டாக்டர் அழகப்ப செட்டியார் ஒரு அழியாத தடம் பதித்தார்.அவர் தனது 1000 ஏக்கர் காடுகளை பல கல்வி நிறுவனங்களை உரு வாக்க நன்கொடையாக வழங்கினார். இது 3 மில்லி யனுக்கும் அதிகமான மாண வர்கள் உருவாக்க வழி வகுத்தது. மேலும் பெண்கள் கல்லூரியை நிறுவ தனது பங்களாவைக் நன்கொடை யாக அளித்து ஒரு சாதாரண கூட அறையில் வசித்து வந்தார். தொழில் முனை வோர்கள், சமுதாயத்திற்குத் திரும்ப கொடுக்கும் அர்ப் பணிப்பு உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். காரைக்குடியில் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆயுர்வேத கல்லூரியை உருவாக்கி, கல்வித் துறையை மேலும் மேம்படுத்தி. சமு தாயத்துக்குப் பயனளிக்கும் நோக்கத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

    • அழகப்பா கல்வி குழும முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி நடந்தது..
    • முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது.

    காரைக்குடி

    அழகப்பா கல்வி அறக்கட்டளை மற்றும் உலகளாவிய அழகப்பா முன்னாள் மாணவர் கூட்டமைப்பு இணைந்து 75-வது வருட கொண்டாட்டத்தின் நிகழ்வாக அழகப்பா முன்னாள் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை பாவ்நகர் விளையாட்டு அரங்கில் நடத்தியது.

    அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் ராமநாதன் வைரவன் வழிகாட்டுதலின்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போட்டியை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    36 அணிகள் கலந்து கொண்டன. இதன் பரிசளிப்பு விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தலைமை தாங்கினார்.காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது. 2-ம் பரிசு ரூ. 5ஆயிரம் மற்றும் கேடயத்தை அழகப்பா கலை கல்லூரி அணியும், 3-ம் பரிசு ரூ. 2,500 மற்றும் கேடயத்தை பாண்டியன் மெமோரியல் அணியும் வென்றன.

    சிறந்த பேட்ஸ்மேனாக கானாடுகாத்தான் சேவாக் அணியின் கார்த்திக், சிறந்த பந்து வீச்சாளராக பாண்டியன் மெமோரியல் அணியின் தினேஷ், தொடர் நாயகனாக அழகப்பா கலை கல்லூரி அணியின் பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அழகப்பா கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள் செய்திருந்தனர். கல்வி குழும மேலாளர் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.

    ×