search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவியல் மாநாடு"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா பள்ளியில் அறிவியல் மாநாடு நடந்தது.
    • நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வறிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாட்டின் 2-வது பகுதி நடைபெற்றது, பள்ளி தாளாளர் குமரேசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செந்தில் குமார், பள்ளி ஆலோசகர் பாரதி பள்ளி நிர்வாக அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக வைமா வித்யாலயா பள்ளி தாளாளர் திருப்பதி செல்வம் மற்றும் மகாத்மா வித்யாலயா பள்ளி தாளாளர் முருகேசன் மற்றும் பலர் விழாவை கலந்து கொண்டனர்.

    ராஜ பாளையம், வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 230 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டது. கல்லூரி பேரா சிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். வழிகாட்டி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மாநில செயலாளர் பால கிருஷ்ணன் வழிகாட்டி ஆசிரியர்களிடம் உரை யாற்றினார். நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வ றிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

    • ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் அக மதிப்பீட்டு குழு, ராஜபாளையம் ரோட்டரி சங்கம், ராஜபாளையம் வட்டார தமிழ்நாடு அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து விருதுநகர் மாவட்ட 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராஜூக்கள் கல்லூரியில் நடத்தியது.

    மாநாட்டின் கருப்பொருளாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. ராஜபாளையம் வட்டாரத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் குழுவின் விருதுநகர் மாவட்ட ஆலோசகர் சுரேஷ் தளியத் தலைமை உரையாற்றினார். ராஜபாளையம் எக்ஸட் ஜே.சி.ஐ. பட்டய தலைவர் மாடசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா பெரியத்தாய் ேபசினார். மாநிலச் செயலாளர் பரமசிவம் அறிமுக உரையாற்றினார். இதயம் நிறுவனங்கள் மேனேஜிங் டைரக்டர் முத்து, கல்லூரி ஆட்சி மன்ற குழுச் செயலர் சிங்கராஜ் மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்க தலைவர் வைமா திருப்பதி செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிகச் சிறப்பான திட்டத்தை வெளிப்படுத்திய மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்களை வழங்கினர்.

    கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், சத்யா கல்வி குழும தலைவர் குமரேசன், ராஜபாளையம் ரோட்டரி சங்க செயலர் பார்த்தசாரதி, துளிகள் அமைப்பு மாவட்ட பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வட்டார செயலாளர் மாரியப்பன் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த திட்டத்தை தேர்வு செய்தனர்.

    • முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேச்சு
    • குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது

    வேலூர்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆக்சிலியம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    இந்த அறிவியல் மாநாட்டினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    மாணவர்கள் ஊக்கமுடன் முயற்சி மேற்கொண்டால் மிக சிறந்தவர்களாக வளர முடியும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வேண்டும். படிக்க இயலாத மாணவர் என கூறப்பட்ட மாணவர் தான் மிக சிறந்த அறிவியல் விஞ்ஞானியாக மாறினார். அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். அனைவரிடமும் ஆற்றல் இருக்கிறது பயிற்சி முயற்சி தேவை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அமுதா தலைமை தாங்கினார். ஆக்சிலியம் கல்லூரியின் துணை முதல்வர் சுமதி துணைத் தலைவர்கள் விஸ்வநாதன் செ.நா.ஜனார்த்தனன் செயலாளர் டி.முனுசாமி மாவட்ட நிர்வாக குழு பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    மாநில பொதுச் செயலாளர் எஸ் சுப்பிரமணி மாநில செயலாளர் சேதுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

    மாவட்ட பொருளாளர் டி.மஸ்தான் சா.குமரன் வீரா.குமரன் எம்.ஜி.ராமகிருஷ்ணன் ஆக்சிலியம் கல்லூரி கிளை தலைவர் மற்றும் முதல்வர் ஜெயசாந்தி செயலாளர் காயத்ரி பொருளாளர் உமாசந்திரா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் டி.மஸ்தான் நன்றி கூறினார்.

    ×