search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா பள்ளியில் அறிவியல் மாநாடு
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா பள்ளியில் அறிவியல் மாநாடு

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா பள்ளியில் அறிவியல் மாநாடு நடந்தது.
    • நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வறிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாட்டின் 2-வது பகுதி நடைபெற்றது, பள்ளி தாளாளர் குமரேசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செந்தில் குமார், பள்ளி ஆலோசகர் பாரதி பள்ளி நிர்வாக அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக வைமா வித்யாலயா பள்ளி தாளாளர் திருப்பதி செல்வம் மற்றும் மகாத்மா வித்யாலயா பள்ளி தாளாளர் முருகேசன் மற்றும் பலர் விழாவை கலந்து கொண்டனர்.

    ராஜ பாளையம், வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 230 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டது. கல்லூரி பேரா சிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். வழிகாட்டி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மாநில செயலாளர் பால கிருஷ்ணன் வழிகாட்டி ஆசிரியர்களிடம் உரை யாற்றினார். நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வ றிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

    Next Story
    ×