search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
    X

    தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

    • ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் அக மதிப்பீட்டு குழு, ராஜபாளையம் ரோட்டரி சங்கம், ராஜபாளையம் வட்டார தமிழ்நாடு அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து விருதுநகர் மாவட்ட 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராஜூக்கள் கல்லூரியில் நடத்தியது.

    மாநாட்டின் கருப்பொருளாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. ராஜபாளையம் வட்டாரத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் குழுவின் விருதுநகர் மாவட்ட ஆலோசகர் சுரேஷ் தளியத் தலைமை உரையாற்றினார். ராஜபாளையம் எக்ஸட் ஜே.சி.ஐ. பட்டய தலைவர் மாடசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா பெரியத்தாய் ேபசினார். மாநிலச் செயலாளர் பரமசிவம் அறிமுக உரையாற்றினார். இதயம் நிறுவனங்கள் மேனேஜிங் டைரக்டர் முத்து, கல்லூரி ஆட்சி மன்ற குழுச் செயலர் சிங்கராஜ் மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்க தலைவர் வைமா திருப்பதி செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிகச் சிறப்பான திட்டத்தை வெளிப்படுத்திய மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்களை வழங்கினர்.

    கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், சத்யா கல்வி குழும தலைவர் குமரேசன், ராஜபாளையம் ரோட்டரி சங்க செயலர் பார்த்தசாரதி, துளிகள் அமைப்பு மாவட்ட பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வட்டார செயலாளர் மாரியப்பன் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த திட்டத்தை தேர்வு செய்தனர்.

    Next Story
    ×