search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவிப்பாணை"

    • அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • அக்டோபர் 19-ம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும், அக்டோபர் 19-ம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×