search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாள்வெட்டு"

    • அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர்.
    • டாஸ்மாக் கடை முன்பு பலத்த காயங்களுடன் கிடந்தார்.

    கோவை,

    கோவை பள்ளப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 31). டிரைவர். இவரது அண்ணன் பிரகாஷ் (34). சுமை தூக்கும் தொழிலாளி.

    இந்த நிலையில் வினோத்குமாருக்கு ஒண்டிப்புதூர் பட்டணம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பிரகாஷ் பலத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது அண்ணனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

    பின்னர் வினோத்குமார், பிரகாசிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது பிரகாஷ் தனக்கு தனது நண்பர் சந்தோஷ் என்பவர் செல்போனில் அழைத்தார். அவர் தன்னை பட்டணம் பகுதியில் யாரோ கடத்தி வதைத்து உள்ளதாக தெரிவித்தார்.

    எனக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் எனக்கு மணி மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவருக்கு போன் செய்து விசாரித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மணி நெசவாளர் காலனி பகுதிக்கு என்னை வர கூறினார். நான் அங்கு சென்றேன். ஆனால் மணி அங்கு இல்லை. அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மணி மற்றும் அவரது நண்பர்கள் நீலதேவன், நவின்குமார் மற்றும் சிலர் அங்கு நின்று இருந்தனர்.

    அங்கு நான் சென்று எனது நண்பர் சந்தோஷ் குறித்து கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர் என்றார்.

    பின்னர் இதுகுறித்து அரவது தம்பி வினோத்குமார் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் வெட்டிய மணி, நீலதேவன், நவின்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

    • குடிக்க பணம்தர மறுத்த தந்தைக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.
    • மகன் கைது செய்யபட்டார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதன குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 60). இவர் பருத்தி விற்ற பணத்தை முதல் மனைவியின் மகன் பழனிசாமி (28) குடிப்பதற்காக கேட்டார். ராமர் கொடுக்க மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, பெற்ற தந்தை என்றும் பாராமல் ராமரை அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மனைவி வள்ளி (45) கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

    • 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஜோன்ஷா (வயது 26). டிரைவர். சம்பவத்தன்று இவரும் கிட்டுப்பிள்ளை வீதயை சேர்ந்த பஸ் டிரைவர் ஜெயராம் (36) ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சிக்கன் கடை அருேக வைத்து மது குடித்தனர்.

    அப்போது ஜோன்ஷாவிடம் ஜெயராம் நீ முத்துராம் என்பவருடன் பழக கூடாது என கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராம் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஜோன்ஷாவின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வெட்டினார்.

    அப்போது ஜோன்ஷா, ஜெயராமிடம் இருந்து அரிவாளை பறித்து அவரை திருப்பி வெட்டினார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் வெட்டு விழுந்தது. சிறிது நேரத்தில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து 2 பேரும் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×