search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பெரியகருப்பன்"

    • அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
    • கருப்பர் கோவிலில் திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேலங்குடி சாம்பிராணி கருப்பர் கோவிலில் திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

    அதனை தொடர்ந்து மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதே போன்று சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் புலவர் செவந்தியப்பனின் மகன் துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், திருப்பத்தூர்வடக்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் தென்னவன், கல்லல் ஒன்றிய செயலாளர் அண்ணா மலை, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் குண சேகரன் உள்ளிட்ட 26 பேர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளரும், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவருமான சண்முக வடிவேல், நெற்குப்பை பேரூராட்சி மன்ற தலைவர் புசலான், ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், நெடுமரம் ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்க வாசகம், திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற தலை வர் கோகிலாராணி நாராயணன், மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், மாவட்ட விவசாய அணி சாமிகண்ணு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய மாண வரணி அமைப்பாளர் சோமசுந்தரம், சீமான் சுப்பையா, எம்.புதூர் கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • இளையான்குடியில் ரூ.2.41 கோடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • இந்த ைமயத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி பகுதியில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், இந்த ைமயத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன.

    குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெறுவதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன் பெற்று வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், வேளாண் இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் இந்திரா, ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி சாந்தாராணி, இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரகப் பகுதிகளில் 698 வீடுகள் கட்ட ரூ.16.75 கோடி நிதி ஒதுக்கீடு
    • அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

    கன்னியாகுமரி:

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்றிரவு கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

    இன்று காலை அமைச்சர் கள் பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் ரூ.50கோடி செலவில் முன்மாதிரி வட்டார வள மைய புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முன்மாதிரி வட்டார வள மைய கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து நுள்ளிவிளை ஊராட்சியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தினை தொடங்கி வைத்தார். ஆத்திவிளை ஊராட்சியில் காளான் உற்பத்தி அலகை பார்வை யிட்டார். பின்னர் தச்சமலை யில் பழங்குடியினரின் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.

    பின்னர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் சமத்துவ புரம் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-22 -ஆம் ஆண்டில் ரூ.241.574 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது நடப்பு ஆண்டிலும் இது வரை ரூ. 101.973 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஊரக பகுதிகளில் வீடு தோறும் தரமான குடிநீர் போதுமான அளவு வழங்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. 9 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 95 ஊராட்சிகளில் 1,43,436 குடியிருப்புகளுக்கு ரூ.47.76 கோடி செலவில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் நடப்பாண்டில் 28,851 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 80 சாலைகளை சீரமைக்க ரூ.42.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் ஊரகப் பகுதிகளில் 698 வீடுகள் கட்ட ரூ.16.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள 4 பெரியார் சமத்துவபுரங்களில் முதல் கட்டமாக 2 சமத்துவப்புரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.1.348 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கும் தொழில்களை விரிவு படுத்துவதற்கும் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பெண்கள் முன்னேற்றத்திற்கு கடந்த ஆண்டு 10,226 சுய உதவி குழுக்க ளுக்கு ரூ.508.47 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் குமரி மாவட்டத்தில் 44 மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.88 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற மகளிர் சத்தான உணவை பெறும் வகையில் 4,100 மகளிருக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து விதைத்தோட்டம் அமைப்பதற்கு செடிகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டுள்ளன .

    கிராமப்புற விவசாயி களின் வருமானத்தை பெருக் கும் வகையில் குமரி மாவட்டத்தில் 4 ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை அமைக்க ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், தி.முக. மாவட்ட பொருளாளர் கேட்சன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. செயலா ளர் தாமரைபாரதி, மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், கன்னியாகுமரி சிறப்புநிலைபேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.
    • 12 ஆயிரத்து 525ஊராட்சிகளும் இணைய வழி மூலம் இணைக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் கன்னியாகுமரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக தேவையான கட்டமைப்பு வசதிகளை முதல்-அமைச்சர் உருவாக்கி வருகிறார். இதற்காக எல்லா துறைகளுக்கும் ஆலோசனை வழங்கி உள்ளார். ஊரக வளர்ச்சி துறைக்கும் பல்வேறு பங்களிப்பை வழங்கி வருகிறார்.

    இந்த துறையை பொறுத்த வரை கிராமப்புற மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்காக தொடங்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக் குழு.

    இதன் மூலம் வேலை வாய்ப்பு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டுள்ளது. கிராமப்புறங்களை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி 1 லட்சத்து 19 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்துள்ளோம்.

    ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மையம் கன்னியாகுமரியில் விரைவில் அமையும். இதற்கான இடத்தை இன்று ஆய்வு செய்துள்ளோம். இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று எழிலாய்ந்த பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படும்.

    12 ஆயிரத்து 525 ஊராட்சிகளும் இணைய வழி மூலம் இணைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வெகுவிரைவில் அனைத்து ஊராட்சிகளும் இணையங்களில் இணைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×