search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் நாசர்"

    • அயனம்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பொக்லைன் இயந்திரத்தை இயக்கி குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    பூந்தமல்லி:

    திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ராஜாங்குப்பம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பொக்லைன் இயந்திரத்தை இயக்கி குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ஆனந்திரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 10 ஆண்டுகளாக மூழ்கிப்போன ஆவினை இன்றைய தினம் நீர்மூழ்கி கப்பலாக மாற்றி வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

    கோவை:

    கோவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மலுமிச்சம்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுடன் பால் கொள்முதல் குறித்து இன்று காலையில் கள ஆய்வு நடத்தினார்.

    தொடர்ந்து, மதுக்கரையில் ஆய்வு பணியை மேற்கொண்டார். பின்னர், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ் புரம் உயர் தொழில்நுட்ப ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மூழ்கிப்போன ஆவினை இன்றைய தினம் நீர்மூழ்கி கப்பலாக மாற்றி வருகிறோம். உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் அனைத்து ஆவின் விற்பனை நிலையங்களை துவக்கி வைத்து வருகிறோம்.

    கோவை மாநகரத்தில் இன்று ஒரு கோடி மதிப்புள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்துள்ளோம். கடந்த ஆட்சியின் போது காலிப்பணியிடங்களை நிரப்ப முறைகேடு நடந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணியிடங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை முறைப்படுத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆவின் தலைவர் பதவி இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதிய பால் பண்ணை கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் ஏற்படுத்த உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய விசாரணையில் தவறு செய்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தவறுகள் யார் செய்தாலும் தண்டிக்கப்படுவர். மேலும், ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.

    இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 கடைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் எங்களின் தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் பேசலாம். அவர் நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கியவர்.

    ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து தவறானது. அவர் தன்னை முன்னிலைப்படுத்தி நானும் ரவுடி, நானும் ரவுடி என்பது போல் கூறி வருகிறார். ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் தயாரிக்க சாத்தியம் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆய்வுக்கு முடிவுக்கு பிறகு தான் ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதற்குள், சுகாதாரத்துறை அமைச்சர் ரூ. 77 கோடி வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை மீது நிச்சயமாக வழக்கு தொடரப்படும். இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை. ஆவின் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 24 லட்சம் இருந்தது. தற்போது அரசின் நடவடிக்கை காரணமாக ரூ.42 லட்சம் அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

    தொடர்ந்து ஆவின் பச்சாபாளையத்தில் அமைச்சர் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    ×