search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தா மோ அன்பரசன்"

    • சென்னையில் நடை பெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    நீட் தேர்வுக்கு விலக்கு கோரியும், இதற்கு முட்டுக்கட்டையாக உள்ள மத்திய அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டித்தும் தி.மு.க. சார்பில் 20-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    சென்னையில் நடை பெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் நடை பெறும் உண்ணாவிரதத்தில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நடைபெறும் போராட்டம் செங்கல்பட்டு அரசு மருத்து வமனை எதிரில் நடைபெறுகிறது. இந்த உண்ணா விரதத்தை மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 20-ந் தேதி தொடங்கி வைத்து கண்டன உரையாற்ற உள்ளார். இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் பிரபு, மருத்துவ அணி அமைப்பாளர் செந்தில்குமார் வரவேற்புரையிலும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

    இதில் துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, க.செல்வம் எம்.பி., மீ.அ.வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் து.மூர்த்தி, விசுவநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆ.மனோகரன், செம்பருத்தி, துர்கேஷ், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோரும் கண்டன உரையாற்றுகின்றனர்.

    இதில் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர். முடிவில் சபாபதி மோகன் முடித்து வைத்து பேசுகிறார்.

    • மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.

    சென்னை:

    நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பில் 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், தி.மு.க.தலைமை பொதுக் குழு உறுப்பினர் இரா.ஜிஜேந்திரன் ஜிஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) எஸ்.கே.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் தாமோதரன், வண்டலூர் வட்டாட்சி யர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் கே.பி.ஜார்ஜ், கே.பி. அச்சுததாஸ், எஸ்.அப்துல்காதர், டி.ராமமூர்த்தி, ஜெ.மனோகரன், கே.பாஸ்கர், மதன கோபால், எம்.கே.டி.சரவணன், எம்.கே.எஸ்.செந்தில், ஓய்.ஜினோ, எஸ்.மதன், கே.பி.நரேஷ்பாபு, ஜி.எம்.கார்த்திக், எஸ்.முரளி, எஸ்.ஜெகதீசன், டி.பிரகாஷ், எஸ்.பழனி வேல், ஆர்.கணேசன், த.சீனிவாசன், என்.கோகுலநாதன், வி.சண்முகம், ஜெமினிஜெகன்,எம்.கே.பி.சதீஷ்குமார், ஆர்.தினேஷ்குமார்,பொன்.தசரதன், புண்ணியகோட்டி, ஏ.எஸ்.தரணி, பாலாஜி, வெங்கடேசன், ஜெ.காளிஸ்வரன்,எஸ்.ராம்பிரசாத், பி.கணேசன், சந்திரசேகர் மற்றும் கவுன்சிலர்கள் ஸ்ரீமதி ராஜி, ப.ரவி, ஜெ.குமரவேல், டி.சதீஷ்குமார், ஆர்.விக்னேஷ், எம்.நாகேஸ் வரன், அ.டில்லீஸ்வரி ஹரி, ஜெயந்திஅப்பு, எம்.நக்கீரன், எஸ்.சரஸ்வதி, திவ்யா சந்தோஷ்குமார், சசிகலாசெந்தில், அம்பிகா பழனி, ஸ்ரீமதி டில்லி, கெளசல்யாபிரகாஷ், ஜெயந்தி ஜெகன், நளினி மோகன், பரிமளா கணேசன், சுபாஷினி கோகுலநாதன்,கே.கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் வி.மகாலிங்கம், ஜெயசாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
    • விழாவில் பள்ளியின் மூத்த முதல்வர் சைலஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    சென்னை:

    நங்கநல்லூரில் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- ஸ்ரீ வாரி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் அறிவியல் கலை கைவினை கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சியை குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    பிரின்ஸ் பள்ளி மிகவும் கட்டுப்பாடுடன், கண்டிப்புடன் நடைபெறும் பள்ளியாகும். இங்கு படித்த ஏராளமான மாணவர்கள் பல்வேறு உயர் பதவியில் உள்ளனர்.

    மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் போன்ற பாடத் திட்டத்திற்கு தகுந்தார்போல் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.

    கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவது போல், பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு புத்தொழில் பயிற்சி வழங்க இருக்கிறோம். அரசு இதற்கான திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மண்டல குழு தலைவர் சந்திரன் பகுதி செயலாளர் குணா, கவுன்சிலர் தேவி, பள்ளியின் சேர்மன் டாக்டர் கே.வாசு தேவன், துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், பள்ளியின் மூத்த முதல்வர் சைலஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×