search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தங்கம் தென்னரசு"

    • தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி, மல்லாங்கிணறு, ஆர்.ஆர்.நகர், சிவகாசி ஆகிய இடங்களில் கூட்டுற வுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தள்ளுபடி சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கே ற்று 1,108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11 ஆயிரத்து 197 பயனா ளிகளுக்கு ரூ.18.24கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பயனாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே முதன்முறையாக 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட த்தில் மகளிர் சுய உதவிக்குழு இயக்கத்தை முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புற ங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றினார்.

    தற்போது முதல்-அமைச்சர் செயல்படுத்திய மகளிருக்கான இலவச பஸ் பயணம் திட்டம் மூலம் கல்வி, பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லக்கூடிய பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்த இலவச பயணம் மூலம் பெண்கள் செலவிடும் கட்டணம் பொருளா தாரத்தில் ஒரு பங்காக சேமிக்கப்படுகிறது.

    கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து கடன் திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 1,195 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 19 ஆயிரத்து 132 பயனாளிகளுக்கு ரூ.32.77 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய திட்டங்களுடன், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை பெண்களின் உரிமைக்காகவும், மேம்பா ட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகு மார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுச்சாமி, விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகர்ம ன்றத்தலைவர் மாதவன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணை த்தலைவர் விவேகன்ராஜ், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் குழு, ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
    • தமிழகத்தில் ஏற்கனவே தொழில் தொடங்கி இருக்கும் அங்குள்ள ஹூண்டாய், சாம்சங், கோபெல்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்தித்து பேச இருக்கிறோம்.

    சென்னை:

    தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்கும் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. அதற்கு ஏதுவாக தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கவும், தொழில்களை விரிவாக்கம் செய்யவும் தேவைப்படும் நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தி வருகிறது. மேலும், தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அரசு அழைப்பு விடுத்து வருகிறது.

    இந்தநிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் குழு, ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த குழு சென்னையில் இருந்து ஒருவார பயணமாக அந்த நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளில் முறையே டோக்கியோ மற்றும் சியோல் ஆகிய நகரங்களுக்கு செல்ல இருக்கிறோம். காலணி தொழில்களில் முதலீடுகளை ஈர்க்க முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

    தமிழகத்தில் ஏற்கனவே தொழில் தொடங்கி இருக்கும் அங்குள்ள ஹூண்டாய், சாம்சங், கோபெல்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்தித்து பேச இருக்கிறோம். காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். அதன் மூலம் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கவும், 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகளும், இதர மாவட்டங்களில் 37 கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
    • சென்னை மாவட்டத்தை சேர்ந்த 15 கலைஞர்கள் இவ்விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் நாட்டின் அரிய கலை வடிவங்களை மக்களிடையே கொண்டு செல்லவும், அவற்றை வளர்க்கவும், கலை வாய்ப்புகளை வழங்கி கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும், பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 160 கலை நிகழ்ச்சிகளை "மக்கள் கலை விழா"வாக நடத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகளும், இதர மாவட்டங்களில் 37 கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. சென்னையில் நடைபெறும் தொடக்க விழாவினைத் தொடர்ந்து இவ்விழா ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருங்காட்சியகத்தில் நடத்தப்பட உள்ளன.

    இந்நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் பல்வேறு கலை வடிவங்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த கலைஞர்களால் நடத்தப்பட உள்ளன. மேலும் சென்னை அரசு இசைக்கல்லூரி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்டக் கலை மன்றங்கள் வாயிலாக கலைத்துறையில் சாதனை படைத்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி, 19 வயது முதல் 35 வயது வரை கலை வளர்மணி, 36 வயது முதல் 50 வயது வரை கலைச் சுடர்மணி, 51 வயது முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என வயதுக்கு ஏற்றவாறு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சென்னை மாவட்டத்தை சேர்ந்த 15 கலைஞர்கள் இவ்விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இக்கலைஞர்களுக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான மாநில அளவிலான கலைப்போட்டியில் வெற்றி பெற்ற 15 இளம் கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முப்பெரும் விழாவில் கலைஞர்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கி மக்கள் கலை விழாவினைத் தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றுகிறார்.

    இவ்விழாவில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி, அருங்காட்சியகங்கள் துறையின் இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி, ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது.
    • ஆய்வு பணியை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    சங்ககால பாண்டியர்களின் துறைமுகமாக கொற்கை போற்றப்படுகிறது.

    சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் சங்கமருவியக் காலத்தைச் சார்ந்த காவியமான சிலப்பதிகாரமும் கொற்கையைப் பற்றி விவரிக்கின்றன.

    பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச்சிறந்த துறைமுகமாக செயல்பட்டிருந்தது. மேலை நாட்டுடன் குறிப்பாக ரோம் நாட்டுடனும், இலங்கையுடனும், பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடல்வழி வணிகம் நடைபெற்றுள்ளது.

    அகழாய்வாளர்கள் கொற்கையில் ரோமநாட்டு மட்கலன்களும், ரௌலட்டட் வகை பானை ஓடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு மேற்கொண்ட அகழாய்வில் கங்கை சமவெளியை சார்ந்த கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வடஇந்திய கருப்பு வண்ணமெருகேற்றப்பட்ட பானைஓடுகளும் மற்றும் கருப்பு பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகளும் வெளிப்படுத்தப்பட்டன. இவை தமிழ்நாடானது இந்தியாவின் பிறபகுதிகளோடு குறிப்பாக கங்கை சமவெளி நகரங்களுடன் நெருங்கிய உள்நாட்டு வணிகம் நடைபெற்றுள்ளதைக் எடுத்துக்காட்டுகிறது.

    ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் பெறப்பட்ட கரிமப்பகுப்பாய்வுக் காலக்கணிப்பின்படி கி.மு.8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிக முக்கியத் துறைமுகமாக செயல்பட்டிருந்ததை சுட்டிக்காட்டுகிறது.

    இதற்கிடையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிப்பதற்காக கடல் சார் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது. அதனை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல் பகுதியில் நடைபெறுகிறது. வருகிற 9-ந்தேதி வரை இந்த ஆய்வில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், தொல்லியல் அலுவலர்களும் ஈடுபடுகின்றனர்.

    ஆய்வின் முடிவில் கொற்கையில் புதைந்துள்ள மிகப்பெரிய துறைமுகமும், அதை சார்ந்த வரலாற்றுத்தகவல்களும் விரைவில் வெளிவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.
    • திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய முதல் மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் பேசியதாவது-

    மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன். தந்தை பெரியார் பேசிய சமூக சீர்திருத்த கோட்பாடுகள், சீர்திருத்தக்கருத்துக்கள், அரசியல் பொருளாதாரம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியுனுடைய அடிப்படையில் அடுத்த பரிணாமமாக அதை கொண்டு சேர்க்கக் கூடிய கட்டம்.

    சுய மரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள், தமிழ் மொழிக்கான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆட்சி முறையை கொண்டு வருவது தான் திராவிட மாடலுடைய ஆட்சி. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சட்டம், திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு, சம வேலை வாய்ப்புகள் என எல்லா மாவட்டத்திலும், எல்லா துறைகளிலும் உருவாக்க தூணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சி.

    திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும், எதையும் சிதைக்காது, சீர்தூக்கும், யாரையும் பிரிக்காது எல்லோரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் இந்த ஆட்சி தாழ்த்தாது அனைவரையும் சமமாக நடத்தும், யாரையும் இந்த ஆட்சி புறக்கணிக்காது தோளோடு தோள் நின்று அனைவரையும் அரவணைக்கும். இந்த கோட்பாடுகளைத்தான் ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டு காலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இன்று நிரூபித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×