search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கேஎன்நேரு"

    • முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.
    • சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் 2013-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1516.82 கோடியில் 2-வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இப்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் முடிந்துள்ளதால் இன்னும் 10 நாட்களில் இதை திறக்க முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.


    நெம்மேலியில் 2-வது நிலையத்தில் இருந்து தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார்மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.

    சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது. நெம்மேலியில் 2 நிலையங்கள் உள்ள நிலையில் போரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இது 2026 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது
    • 400 மோட்டர்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.

    வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


    அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- சென்னையில் இதுவரை 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. 75 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மரம் அகற்றுவது, மின்கம்பம் அகற்றுவது, மெட்ரோ ரெயில் பணிகள் போன்ற காரணங்களால் சில இடங்களில் இந்த பணிகள் தாமதமானது.

    கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் இந்த ஆண்டு சுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை செய்துள்ளது. 75 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளையும் நிறைவு செய்ய ஆயத்தமாகியுள்ளோம். சென்னையில் 400 மோட்டர்கள் வைத்து தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×