search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க காவல்துறை"

    • அலிஸா மெக்காமன் 2 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது
    • பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்

    அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இதன் தலைநகரம் நாஷ்வில்.

    டென்னிசி மாநில டிப்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த கோவிங்டன் நகரத்தில் உள்ளது சார்ஜர் அகாடமி எனும் தொடக்கப்பள்ளி. இங்கு 4-வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் 38 வயதான அலிஸா மெக்காமன் (Alissa McCommon). இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    2021-ல் இவர் தன்னிடம் படித்த ஒரு 12-வயது முன்னாள் மாணவரிடம் தனது வீட்டில் பாலியல் அத்துமீறல் புரிந்தார். இது மட்டுமின்றி பல மாணவர்களிடம் தகாத பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.

    இது தெரிய வந்ததும் அந்த மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து ஊதியமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    சில நாட்களுக்கு பிறகு இக்குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் குற்றச்சாட்டு உண்மை என கண்டறிந்து வழக்கு பதிவு செய்து அலிஸாவை அவரது வீட்டில் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் பல மாணவர்களுடன் தகாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    அந்த ஆசிரியை இவ்வாறு முறைகேடான உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாகவும், முறையற்ற உறவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது பல குழந்தைகள் புகாரளித்துள்ளனர்.

    இதனையடுத்து சுமார் ரூ.20 லட்சம் ($25,000) பிணையில் வெளிவரும் வகையில் காவலில் அடைக்கப்பட்டார். ஆனால் அலிஸா இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுடன் காவல்துறை பேசி விவரங்களை சேகரித்து வருகிறது.

    அலிஸா பணியிலிருந்து நீக்கப்பட்ட அன்றே பள்ளி நிர்வாகம் அவர் மீது காவல்துறையில் புகாரளித்து அப்போதே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என சில பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    அக்டோபர் 13 அன்று அலிஸா அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

    • திருட்டு குற்றச்சாட்டிற்காக காவல் அதிகாரி காரை மறித்தார்
    • கர்ப்பிணியான டாகியா, ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாய்

    அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் ஆகஸ்ட் 24 அன்று கருப்பர் இனத்தை சேர்ந்த 21 வயது டாகியா யங் எனும் கர்ப்பிணி, தனது கருப்பு நிற செடான் ரக காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு குற்ற விசாரணைக்காக அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டி இருந்ததால் அவர் சென்று கொண்டிருந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். டாகியா காரை நிறுத்தியதும் அவரை காரிலிருந்து இறங்குமாறு கூறினர். ஆனால், இதற்கு டாகியா உடன்பட மறுத்தார்.

    அதற்கு ஒரு காவல் அதிகாரி, "நீங்கள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறீர்கள். இங்கிருந்து தயவு செய்து போகாதீர்கள்" என உத்தரவிட்டார். மீண்டும் மறுத்த டாகியா காரை ஓட்ட முயன்றார்.

    உடனே ஒரு காவல் அதிகாரி அவரது காருக்கு முன்னே சென்று, ஒரு துப்பாக்கியை காட்டி டாகியாவை அச்சுறுத்தினார். அதனையும் அலட்சியபடுத்திய, டாகியா காரை ஓட்ட தொடங்கினார். கார் வேகமெடுத்ததால், ஒரு காவல் அதிகாரி அவரை நோக்கி சுட்டார். இதில் தறிகெட்டு ஓடிய அந்த கார் ஒரு சுவற்றின் மீது மோதி நின்றது.

    அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியாக காரின் கதவை ஒரு அதிகாரி திறக்க முயன்றும் அது முடியாததால், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். அப்போது டாகியா மற்றும் அவரது கருவில் இருந்த சிசுவும் காரிலேயே உயிரிழந்து விட்டது.

    இதனையடுத்து, ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாயாகவும் மற்றும் 2 மாதங்களில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆக இருந்த ஒரு கர்ப்பிணியை கொன்ற குற்றச்சாட்டில் அந்த அதிகாரிகள் ஊதியத்துடன் கூடிய நிர்வாக விடுப்பில் பணியிலிருந்து அனுப்பப்பட்டனர். ஓஹியோ மாநில குற்ற விசாரணை துறை இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே, ஓஹியோ காவல்துறை இந்த நிகழ்ச்சியை படம் பிடித்திருந்த ஒரு காவலரின் கவச உடையில் தைக்கப்பட்ட வீடியோ கேமிராவின் காட்சிகளை வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

    கருப்பர் இன மக்கள் மீது அமெரிக்க காவல்துறை அண்மை காலங்களில் குற்ற நடவடிக்கைகளின் போது மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக இணையத்தில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • நேஷனல் நைட் அவுட் நிகழ்ச்சியில் மக்களும், காவல் அதிகாரிகளும் பங்கேற்பார்கள்
    • ஆதாரங்களை தடுக்கும் வகையில் காரிலிருந்த கண்காணிப்பு கேமிராக்களை உடைத்தார்

    அமெரிக்காவில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கும், மக்களுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான உறவுநிலை நிகழ, "நேஷனல் நைட் அவுட்" (National Night Out) எனப்படும் சமுதாய கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் காவல்துறையை சேர்ந்தவர்களும், மக்களும் இணைந்து பங்கு பெறுவார்கள்.

    ஆகஸ்ட் ௧ம் தேதி அன்று, அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் மனலாபன் குடியிருப்பு பகுதியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இப்பகுதி காவல்துறையை சேர்ந்தவர் 46 வயதான கெவின் ரூடிட்ஸ்கி (Kevin Ruditsky).

    கெவின் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் ஒரு 16-வயது சிறுமியை சந்தித்தார். அச்சிறுமியின் மீது ஆசையை வளர்த்து கொண்ட கெவின், அச்சிறுமியின் வசிப்பிடத்தையும், தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்தார். அச்சிறுமியின் தொலைபேசி எண்ணிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்தார்.

    பிறகு ஒரு நாள் அச்சிறுமியின் வீட்டின் வாசலிலேயே காத்திருந்து அச்சிறுமி வெளியில் வந்ததும் அவரை தனது காவல்துறை காரிலேயே மெதுவாக பின் தொடர்ந்தார். அவர் அருகே சென்று அந்த சிறுமியை தனது காரில் ஏற்றி, அவள் கைகளில் விலங்கிட்டார். செயலற்று இருந்த அந்த சிறுமியை முத்தமிட முயன்றார்.

    இக்காட்சிகள் தனது காரில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி விடுவதை தடுக்கும் நோக்கத்தில், அந்த கேமிராக்களை உடைத்தார்.

    அவரிடமிருந்து எப்படியோ தப்பிய சிறுமி, தனக்கு வேண்டியவர்களிடம் இதை தெரிவித்ததின் பேரில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணையில், கெவின் செய்த குற்றம் ஊர்ஜிதமானதும் அவர் மீது தகுந்த பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    பணியிலிருந்தும் கெவின் ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    "மக்களின் நம்பிக்கையை பெற ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு காவல்துறை அதிகாரியே இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டது எந்த விதத்திலும் சகித்து கொள்ள முடியாத செயல்" என இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×