search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி ஆற்றுப்பாலம்"

    • ஆற்று நீர் தடையின்றி செல்ல தூண்களுக்கிடையே 21 மீ., இடைவெளியில் ஏழு கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • ரோட்டில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன.

    மடத்துக்குளம்:

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் உள்ளது. திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலம் 1986ல், 12 தூண்களுடன் 152 மீ., நீளம், 10 மீ., அகலத்துடன் கட்டப்பட்டது. ஆற்று நீர் தடையின்றி செல்ல தூண்களுக்கிடையே 21 மீ., இடைவெளியில் ஏழு கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பாலம் கட்டப்பட்ட போது, எதிர்பார்க்கப்பட்ட வாகன போக்குவரத்தையும் தாண்டி, வாகனங்கள் தற்போது அவ்வழியாக சென்று வருகின்றன.பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பாலத்தின் உறுதித்தன்மை குறித்துஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கனரக வாகனங்கள் பாலத்தை கடக்கும் போது பாலத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன.பாலத்தின் தடுப்பு சுவர்கள் பல இடங்களில் உடைந்துள்ளன. ரோட்டில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன.

    நடைபாதையில் உள்ள சிமென்ட் தளங்கள் பெயர்ந்து போயுள்ளன.தடுப்பு சுவரை ஒட்டி செடிகள் முளைத்துள்ளன. மேலும் பாலத்தின் இரு நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்ட தடுப்புகள் சரிந்து புதருக்குள் மறைந்துள்ளது.இதனால் இரவு நேரத்தில், வாகன ஓட்டிகள் தடுமாற வேண்டியுள்ளது. போதிய எச்சரிக்கை பலகைகளும் இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 76.92 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • விபத்துகளை தவிர்க்க தேவையான பிரதிபலிப்பான், எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாமல் உள்ளது.

    மடத்துக்குளம்:

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆறு குறுக்கிடுகிறது. ஆற்றின் குறுக்கே 1984ல் மேம்பாலம் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால்பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.கனரக வாகனங்கள் தொடர் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் பாலத்தின் ஓடுதளத்தில் விரிசல், அதிர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த 2015ல்தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 76.92 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதன்பின்னர்தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், குறிப்பிட்ட இடைவெளியில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் ஓடுதளத்தில், ஆங்காங்கே குழிகள் உருவாகி வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்துகிறது.

    பாதசாரிகளுக்கான நடைபாதை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது, பழநிக்கு பாதயாத்திரை செல்பவர்கள் உள்ளிட்ட பாதசாரிகள் பாலத்தின் நடைபாதையில் செல்ல முடியாமல் ரோட்டிலேயே நடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் பாலத்தை ஒட்டி ஆற்றின் கரையில் உள்ள சீமை கருவேல மரங்கள், தடுப்பு சுவர் அளவுக்கு உயர்ந்து வளர்ந்துள்ளது. இரவு நேரங்களில், விபத்துகளை தவிர்க்க தேவையான பிரதிபலிப்பான், எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாமல் உள்ளது.தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தை குறிப்பிட்ட இடைவெளியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    ×