search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிராமபுரம்"

    அபிராமபுரத்தில் பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கின்றன.

    சென்னை ஆழ்வார்பேட்டை பீமன் கார்டன் பகுதியில் பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் பையா உலாங்கு. மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான இவர் இங்கு தங்கி இருந்து பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று மாலை வேலை முடிந்து தான் தங்கி இருக்கும் இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த வாலிபர்கள் சிலர் பையா உலாங்குவின் முகத்தில் மயக்க ஸ்பிரேவை அடித்தனர்.

    இதில் மயங்கி விழுந்த அவரிடமிருந்து செல்போனை பறித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களை சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள் அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் மணிகண்டன், யோகேஷ் ஆகிய 3 பேரே செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் மேலும் பல இடங்களில் 3 பேரும் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ், ராயப்பேட்டையைச் சேர்ந்த அரிபிரகாஷ், கோட்டூர் புரம் தினேஷ், தேனாம்பேட்டை ரவி, குரியன், கோயம் பேட்டைச் சேர்ந்த விஜயகுமார், அபிராமபுரம் செல்வராஜ், அடையாறு விஸ்வா, அம்பத்தூர் குமரரேசன் ஆகியோரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

    குமரன் நகர் பகுதியிலும் 2 பேரிடம் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

    திருட்டு செல்போன்களை வாங்கும் வியாபாரிகளின் கடைகளில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் திருட்டு செல்போன்களை வாங்கியவர்களும் பிடிபட்டனர். இருப்பினும் செல்போன் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    சென்னை அபிராமபுரத்தில் கத்திமுனையில் வாலிபர்களிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    தாம்பரம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. இவர் தனது நண்பர் விக்னேஷ் குமாருடன் நேற்று இரவு 1 மணி அளவில் அபிராமபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சூளையில் உடல்நிலை சரியில்லாத நண்பரை பார்த்துவிட்டு இருவரும் வீடுதிரும்பி கொண்டிருந்தனர்.

    மூப்பனார் பாலம் வழியாக டார்புல்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் சென்ற போது அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழி மறித்தனர். பின்னர் 3 பேரில் ஒருவன் அவசரமாக போன் பேசவேண்டும் என்று கூறி மணிகண்டபிரபுவின் செல்போனை கேட்டு வாங்கினான்.

    பின்னர் செல்போனை திருப்பி கொடுக்காமல் தன் சட்டை பையில் வைத்துக் கொண்டான்.

    இந்த நேரத்தில் கொள்ளையர்களில் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டபிரபுவின் மணி பர்சை பறித்தான். விக்னேஷ்குமாரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தையும் அவர்கள் பறித்தனர்.

    இதனால் மணிகண்ட பிரபுவும், விக்னேஷ்குமாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

    அப்போது அந்த வழியாக இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க உதவினர். இருப்பினும் பணத்துடன் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். 2 பேர் மட்டும் சிக்கினர்.

    இதுபற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். கோர்ட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு உதவி ஆய்வாளர் அறிவழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது பெயர் அப்பாஸ் (26), விக்கி (23) என்பது தெரியவந்தது.

    அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. #Tamilnews
    ×