search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாகஸ் போட்டி"

    • போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பிரைனோபிரைன் நிறுவனம் சென்னை டிரேடு சென்டரில் மாநில அளவிலான அபாகஸ் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் ஹாரூன் ரஷீத், முகமது யக்யா, 3-ம் வகுப்பு மாணவி ஹாஸ்லின் ரிசா மற்றும் 5-ம் வகுப்பு மாணவி அப்சின் சனா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் அபாகஸ் போட்டியில் தேசிய சாதனை படைத்தனர்.
    • முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    இந்திய அளவிலான அபாகஸ் போட்டி சென்னை தமிழ் நாடு வர்த்தக மையத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. இதில் இந்திய அளவில் சுமார் 5,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.இசட்-1 பிரிவில் ரியா முதல் இடத்தையும், இசட்-3 பிரிவில் ஆமினத் ஹாஜிரா 2-ம் இடத்தையும், அல் அஸ்ரியா3-ம் இடத்தையும் பிடித்தது சாதனை படைத்தனர்.

    அபாகஸ் பயிற்சியாளர் உமர் சரிப் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×