search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான அபாகஸ் போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் வெற்றி
    X

    மாநில அளவிலான அபாகஸ் போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் வெற்றி

    • போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பிரைனோபிரைன் நிறுவனம் சென்னை டிரேடு சென்டரில் மாநில அளவிலான அபாகஸ் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் ஹாரூன் ரஷீத், முகமது யக்யா, 3-ம் வகுப்பு மாணவி ஹாஸ்லின் ரிசா மற்றும் 5-ம் வகுப்பு மாணவி அப்சின் சனா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×