search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிசய கிணறுகள்"

    • சிவனை வழிபட்டால் நற்புகழ் கிடைக்கும்.
    • சிவபெருமானின் பூஜையில் தாழம்பூ சேர்க்கப்படுவதில்லை.

    சுயம்பு முருகன்

    ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ளது, வடவிஜயபுரம் என்ற ஊர். இங்குள்ள மலை மீது முருகப்பெருமான் சுயம்புவாக தோன்றி இருந்து அருள்பாலிக்கிறார். எனவே இந்த மலை முருகனை, 'தான்தோன்றி முருகன்' என்று அழைத்து பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

     மயில் மீது அமர்ந்த கோலம்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகருக்கு அருகில் உள்ளது, பார்வதி மலை. இந்த மலையின் மீது முருகப்பெருமானுக்கு கோவில் அமைந்திருக்கிறது. கார்த்திகேயன் என்ற பெயரில் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் இத்தல முருகனை பக்தர்கள் தரிசிக்கலாம்.

     மாலினி சாஸ்திரம்

    மலர்களால் அழகுபடுத்தும் கலையை விவரிப்பது 'மாலினி சாஸ்திரம்'. மலர் காட்சி அமைத்தல், விதவிதமாக மாலைகள், செண்டுகள் செய்தல், பெண்களின் சிகை அலங்காரத்தில் மலர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல மலர் அலங்கார முறைகளைப் பற்றி இந்த சாஸ்திர நூல் கூறுகிறது. இதனை இயற்றியவா் ரிஷ்ய சிருங்கர் என்னும் முனிவர் ஆவார்.

    கழுதை வாகனத்தில் சிவன்

    பெரும்பாலானவர்களின் வீட்டின் முன்பாக, 'என்னைப் பார் யோகம் வரும்' என்று கழுதைப் படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். கண் திருஷ்டி கழிவதற்காகவும், யோகத்திற்காகவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொன்னாலும், கழுதையை வணங்கும் முறை நம்மிடம் இல்லை. தெய்வங்கள் பலருக்கும் பல்வேறு வாகனங்கள் இருந்த போதிலும், கழுதையை வாகனமாக கொண்ட தெய்வங்கள் எதுவும் இல்லை. ஆனால் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சிவன் கோவில் ஒன்றில், கழுதை வாகனத்தின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிவனை வழிபட்டால் நற்புகழ் கிடைக்கும் என்பது, அங்கு நிலவும் நம்பிக்கை.

     பூஜையில் தாழம்பூ

    சிவபெருமானின் பூஜையில் தாழம்பூ சேர்க்கப்படுவதில்லை. ஆனால் மற்ற தெய்வங்களுக்கு தாழம்பூ கொண்டு பூஜிக்கும் முறை இருக்கிறது. அப்படிப்பட்ட தாழம்பூவின் நுனியில் லட்சுமி தேவியும், நடுப்பகுதியில் சரஸ்வதியும், காம்பு பகுதியில் மூதேவியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே தெய்வங்களின் பூஜையில் தாழம்பூவை சேர்க்கும்போது, அதன் காம்பு பகுதியை நீக்கிவிட்டு சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

    அதிசய கிணறுகள்

    சென்னை அடுத்துள்ள மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலில் ஆறு கிணறுகள் இருக்கின்றன. இந்த ஆறு கிணறுகளும் 6 விதமான சுவையுடைய தண்ணீரை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய 6 சுவைகளுடன் உள்ள இந்த அதிசய கிணறுகளைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம் என்கிறார்கள்.

    ரத்னாவதி ஆசனம்

    முன் காலத்தில் நீலம், வைரம், பத்மராகம், முத்து, பவளம் ஆகிய ஐந்து வகையான ரத்தினங்களைக் கொண்டு ஆசனம் செய்து, அதில் இறைவனை அமர வைத்து பூஜை செய்வார்கள். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் ஐஸ்வரியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. 5 வகையான ரத்தினங்களால் செய்யப்படும் அந்த ஆசனத்திற்கு, 'ரத்னாவதி ஆசனம்' என்று பெயர்.

     முக்தி தரும் ரஜத லிங்கம்

    வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு 'ரஜத லிங்கம்' என்று பெயர். சென்னை கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில ஆலயங்களில் இப்படியான வெள்ளியில் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் இருக்கின்றன. பிரதோஷம், சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய விசேஷ தினங்களில் இவற்றிக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரஜத லிங்கத்தை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

    ×