search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி திடீர் ஆய்வு"

    • ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து மத்திய மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தருமபுரி,

    தடைசெய்யப்பட்ட எலி மருந்து உரக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயா மற்றும் தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ரேட்டால் எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

    மேலும், அவர் கூறுகையில் ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து மத்திய மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த அபாயகரமான மருந்தை விற்பனை செய்ய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, தருமபுரி மாவட்ட மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் இந்த மருந்தை விற்பனை செய்யக்கூடாது.

    அதேபோல, பொதுமக்களும் இந்த மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இம்மருந்து விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிய வேளாண்துறையை உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எனவே, மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இம்மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் தருமபுரி (9443635600), நல்லம்பள்ளி (7010172866), பாலக்கோடு (9952401900), காரிமங்கலம் (8526719919), பென்னாகரம் (9443207571), அரூர் (7010983841), மொரப்பூர் (6369976049), பாப்பிரெட்டிப்பட்டி (9444497505) ஆகிய வட்டாரங்களுக்கான பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.

    • ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது
    • விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன் தீப்சிங் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு புதியதாக ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.மாரிமுத்து, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர்.செந்தில், வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி, டாக்டர்கள். செந்தில், பார்த்திபன், தன்வீர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • திட்டப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணி களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள், வளமீட்பு பூங்காவில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல்சத்தி திட்டத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பேரூராட்சி நிர்வாகம் கூசுகல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணி களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது தருமபுரி மண்டல உதவி இயக்குனர் குருராஜன், மண்டல செயற்பொறியாளர்கள், மாவட்ட உதவி செயற்பொறியாளர்கள், பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது.
    • ரேஷன் கடை கட்டிடங்களையும் ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையை இன்று காலை கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் திடீரென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ரேஷன் கடை களில் இருந்த பொருட்களும், அரசு பதிவேட்டில் குறிப் பிடப்பட்டிருந்த பொருட் களின் விபரமும் சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார்.

    பின்னர் பொது மக்களுக்கு எந்தவித குறை களும் இல்லாமல் அரசு நிர்ணயித்தபடி அனைத்து பொருட்களும் சரியான முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ரேஷன் கடை கட்டி டங்களை ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து விவ சாயிகளின் இடுபொருட்கள் மற்றும் டிராக்டர்களை பார்வையிட்டார். அப்போது கடலூர் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், மேலாண்மை இயக்குனர் திலீப் குமார், துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி, அலுவலர் உதய குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    படம்கடலூர் சிங்கிரிகுடி ரேஷன் கடையை கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

    • வருகை பதிவேடு குறித்து ேசாதனை
    • சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவ மனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் .

    அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் வருகை பதிவேடு குறித்து ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு சிகிச்சை பெற்று வரும் வார்டு பகுதிக்கு சென்று மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

    புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.

    இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர் சாந்தினி சுகாதார செவிலியர்கள் பணியா ளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • மழை காலங்களில் மாணவர்கள் படிக்க முடியாத நிலை இருந்து வருகிறது
    • கழிவறையை பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஓடு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதாகவும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாது நிலை இருந்து வருகிறது.

    இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இன்று பெருங்கடப்புதூர் கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில் கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் பருவதம் பூண்டி கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி கட்டிடம் பழைய கட்டிடம் மேலும் ஒடுகளால் ஆன கட்டிடத்தின் ஓட்டின் மீது மர இலைகள் அதிக அளவில் இருந்ததால் மழை நீர் எப்படி கீழே வரும் இப்படி இருந்தால் மழை காலங்களில் மழை நீர் ஒழுகும்.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆய்வின் போது பள்ளி மாணவர்களை அழைத்து மதியம் உணவு எப்படி இருந்தது என்றும் எந்த வகையான சாதம் வழங்கப்பட்டது.

    முட்டைகள் வழங்கபட்டதா என பல்வேறு கேள்விகளை மாணவர்களிடம் நேரடியாக கேட்டார். மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளியில் உள்ள கழிவறை சரியான முறையில் இல்லை என்று குற்றம் சாட்டினர். அதையும் ஆய்வு செய்து உரிய முறையில் பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் ஆய்வின் போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர். மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கிராம பொதுமக்கள் பலர் இருந்தனர்.

    ×