search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தவாசி பருவதம்பூண்டி பள்ளியில் அதிகாரி திடீர் ஆய்வு
    X

    பள்ளி கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    வந்தவாசி பருவதம்பூண்டி பள்ளியில் அதிகாரி திடீர் ஆய்வு

    • மழை காலங்களில் மாணவர்கள் படிக்க முடியாத நிலை இருந்து வருகிறது
    • கழிவறையை பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஓடு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதாகவும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாது நிலை இருந்து வருகிறது.

    இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இன்று பெருங்கடப்புதூர் கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில் கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் பருவதம் பூண்டி கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி கட்டிடம் பழைய கட்டிடம் மேலும் ஒடுகளால் ஆன கட்டிடத்தின் ஓட்டின் மீது மர இலைகள் அதிக அளவில் இருந்ததால் மழை நீர் எப்படி கீழே வரும் இப்படி இருந்தால் மழை காலங்களில் மழை நீர் ஒழுகும்.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆய்வின் போது பள்ளி மாணவர்களை அழைத்து மதியம் உணவு எப்படி இருந்தது என்றும் எந்த வகையான சாதம் வழங்கப்பட்டது.

    முட்டைகள் வழங்கபட்டதா என பல்வேறு கேள்விகளை மாணவர்களிடம் நேரடியாக கேட்டார். மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளியில் உள்ள கழிவறை சரியான முறையில் இல்லை என்று குற்றம் சாட்டினர். அதையும் ஆய்வு செய்து உரிய முறையில் பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் ஆய்வின் போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர். மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கிராம பொதுமக்கள் பலர் இருந்தனர்.

    Next Story
    ×