search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? அதிகாரி திடீர் ஆய்வு
    X

    கடலூர் சிங்கிரிகுடி ரேஷன் கடையை கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? அதிகாரி திடீர் ஆய்வு

    • கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது.
    • ரேஷன் கடை கட்டிடங்களையும் ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையை இன்று காலை கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் திடீரென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ரேஷன் கடை களில் இருந்த பொருட்களும், அரசு பதிவேட்டில் குறிப் பிடப்பட்டிருந்த பொருட் களின் விபரமும் சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார்.

    பின்னர் பொது மக்களுக்கு எந்தவித குறை களும் இல்லாமல் அரசு நிர்ணயித்தபடி அனைத்து பொருட்களும் சரியான முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ரேஷன் கடை கட்டி டங்களை ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து விவ சாயிகளின் இடுபொருட்கள் மற்றும் டிராக்டர்களை பார்வையிட்டார். அப்போது கடலூர் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், மேலாண்மை இயக்குனர் திலீப் குமார், துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி, அலுவலர் உதய குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    படம்கடலூர் சிங்கிரிகுடி ரேஷன் கடையை கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×