search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகபாரம்"

    • அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
    • லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது

    களியக்காவிளை,ஜூன்.20-

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளங்களை வாக னங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறை களை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை தனிப்பிரிவு போலீசார் களியக்காவிளை பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த 9 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
    • அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகள் கனிம வளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமை யாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை தனிப்பிரிவு போலீ சார் களியக்காவிளை பகுதி யில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 6 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது வாகனங்களில் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது.

    இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் களியக்காவிளை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
    • வாகனங்களில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங் களில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 7 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனங்களில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பகோணம் பகுதியில் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • இதில் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தற்போது கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் விதிகளை மீறி லாரி, டிராக்டர் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோல் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி செல்வதாக புகார்கள் வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்ற லாரி ஒன்றும், சரக்கு வேனும் மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது.

    இதில் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. கடும் நடவடிக்கை இவ்வாறு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததற்கு அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றி சென்றதே காரணம்.

    எனவே இது போன்று அதிக பாரம் மற்றும் அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியாககடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கேரளாவுக்கு எம்சண்ட், என்சன்ட், ஜல்லி கல் ஆகிய கனிமவளங்களை இரவு நேரங்களில் கொண்டு செல்கிறார்கள்.

      திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட கணரக வாகனங்களில் கனிமவளங்களை வெட்டி ஆரல்வாய்மொழி, சுருளோடு, குலசேகரம், நெட்டா வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வாகனங்கள் எல்லாம் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் சென்றுவிடும். அதிவேகமாக அதிகலோடுடன் இந்த வாகனங்கள் செல்வதால் ரோடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் விரைவில் ரோடுகள் பழுதடைந்து விபத்துக்கள் நடைபெறுவது மட்டும் அல்லாமல் உயிர்பலியும் ஏற்படுகிறது.

      இந்நிலையில் நேற்று இரவு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் குலசேகரத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிவேகமாக வந்த 6 கனரக வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனங்களை மடக்கிபிடித்து சோதனை செய்தபோது அரசு நிர்ணயித்த எடையை விட அதிகளவு இருந்தது தெரியவந்தது உடனே 6 வாகனங்களுக்கு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அதிரடியாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தார்.

      ×